Mayiladuthurai

News June 18, 2024

மயிலாடுதுறை: குற்றவாளி தற்கொலை முயற்சி

image

மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் ஆபாச விடியோவை காட்டி பணம் பறித்த வழக்கில் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பிரகாஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மேலும் எஸ்பி மீனா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பிரகாஷை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டிருப்பது   குறிப்பிடத்தக்கது.

News June 17, 2024

மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட டவுன் – 1 மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பட்டமங்கலம் தெருவில் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நீடூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கங்கணம்புத்தூர் பகுதியில் மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

News June 17, 2024

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

image

சீர்காழியை அடுத்த சீனிவாசா சுப்பராய அரசினர் பல் தொழில்நுட்பக் கல்லூரியில் 1991 – 94ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று முத்து விழா கூட்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், படித்த வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

News June 16, 2024

மயிலாடுதுறையில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

மயிலாடுதுறை அருகே கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்கள் தனியார் அமைப்பு சார்பில் நேற்று வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது . பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் நோட்டு புத்தகம் மற்றும் பேனா உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது.

News June 16, 2024

மயிலாடுதுறை எம்பிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா நேற்று(ஜூன் 16) விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்பிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் சிறப்பாக பணியாற்றும்படி அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

News June 16, 2024

மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட அலுவலகத்தை சூறையாடிய நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று (ஜூன் 15) ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

News June 16, 2024

பொதுமக்கள் கடலில் குளிக்க வேண்டாம் என வலியுறுத்தல்

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டி குறிப்பாக மாலையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வரும் நிலையில் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல் துறை வலியுறுத்தல்.

News June 15, 2024

சீர்காழி மக்களுக்கு ஓர் நற்செய்தி

image

சீர்காழியில் விழுதுகள் இயக்கம் சார்பில் இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் சிறப்பு முகாம் வருகிற ஜூன் 17 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை விழுதுகள் இயக்க மருத்துவ முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 40 வயது கடந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு இலவச உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.

News June 14, 2024

மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக குறைதீர்ப்பு கூட்டரங்கில் வருகின்ற ஜூன் 21ம் தேதி காலை 10 மணி அளவில் திருநங்கைகளின் விபரங்களை பதிவு செய்து அவர்களின் குடும்ப அட்டை , அடையாள அட்டை , ஆதார் அட்டை திருத்தம் , வாக்காளர் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 14, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆட்சியர் தகவல்

image

தரங்கம்பாடி தாலுக்காவில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்காவில் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் தங்கி மக்கள் குறைகளை கோரிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளனர் எனவும் இதில் மக்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தகவல்.

error: Content is protected !!