Mayiladuthurai

News August 21, 2024

விநாயகர் சதுர்த்தி கொண்டாட தயாராகும் மயிலாடுதுறை

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 7ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுபடி, ரசாயன பொருள்கள் கலக்காதவாறு, இயற்கையான முறையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கைவினை கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

News August 21, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ரூ.1 ½ கோடி வரை கடனுதவி வழங்குகிறது. இதற்கான சிறப்பு முகாம் தஞ்சையில் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News August 20, 2024

மயிலாடுதுறையில் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தத்துவள மையம் தொடங்குவதற்கு விருப்பமுள்ள மற்றும் அனுபவம் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கருத்துக்களை வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

தபால் துறை பணியிடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியீடு

image

நாடு முழுவதும் தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 77 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

News August 20, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 20, 2024

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும், குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை, கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

மயிலாடுதுறையில் மீண்டும் அந்த்யோதயா சேவை

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற யார்டு பணிகள் காரணமாக ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை சுமார் 26 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்த அந்த்யோதயா அதிவிரைவு ரயில் இன்று இரவு11. 00க்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் வரை செல்லும். தாம்பரம் ரயில் நிலைய பணிகள் முடிவடைந்த காரணத்தினால் மயிலாடுதுறை வழியாக சென்ற அனைத்து ரயில்களும் மீண்டும் இயங்கும்.

News August 19, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் கடக்கம், முத்தூர், கிளியனூர், பெருஞ்சேரி , கொடவிளாகம் , எடக்குடி, பெரம்பூர், சேத்தூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய கிராமங்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி மங்கநல்லூர் அருகே உள்ள பெரம்பூர் அம்பிகை மண்டபத்தில் நடைபெற உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

மயிலாடுதுறை ரயில் சேவை ரத்து

image

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை தினசரி காலை 6 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் ஆகஸ்ட் 22 , 29 ஆகிய தேதிகளில் கடலூர் துறைமுகம் சந்திப்பு முதல் மயிலாடுதுறை வரை பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் இந்த ரயில் விழுப்புரத்தில் புறப்பட்டு கடலூர் துறைமுகம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்ட பெண் குழந்தைகளுக்கு விருது

image

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் விருதுக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பெண் குழந்தைகள், விருது பெற விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!