India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பில் சிறந்து விளங்கியமைக்காக மத்திய அரசின் விருது பெற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று(ஜூலை 24) சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள், கல்லூரி மாணவர் நிர்மலை கைது செய்ய உத்தரவிட்டனர். மேலும் மணல்மேடு காவல் உதவி ஆய்வாளர் அகோரம் & காவலர் சந்தோஷ் பிரபு ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து SP மீனா நேற்று(ஜூலை 23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி விமானப்படை பயிற்சி மையத்தில் இன்று (ஜூலை 24) காளிதாஸ் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மயிலாடுதுறையைச் சேர்ந்த காளிதாஸ்(55) என்பவர் பயிற்சி மையத்தின் 8 ஆவது கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 3 தோட்டக்கள் பாய்ந்து நிகழ்விடத்திலேயே காளிதாஸ் உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 2, 2A தேர்வு செப்., மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பயனடையும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.,3 முதல் சனி & ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டணமில்லா மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்று பயனடையும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கொள்ளிடம் அருகே மாங்கனம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைபார்த்து வரும் நிலையில் இன்று ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. கொள்ளிடம் வட்டார மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது டெங்கு அறிகுறிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே மாங்கனம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் வேலைபார்த்து வரும் நிலையில் இன்று ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. கொள்ளிடம் வட்டார மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் நியமிக்கப்படாததால் அலுவல் ரீதியாக சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே அரசு வழக்கறிஞர் இராம. செயோன் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்த நிலையில், புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை நல்லத்துக்குடியை சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என அழைக்கப்பட்டு வந்த மயிலாடுதுறை அதன்பின்பு “மாயவரம்” என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனால் இப்பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு நாகையில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்பட்டு வருகின்றது.
இன்று (22/7/ 24) நாகர்கோவிலில் இருந்து மயிலாடுதுறை வழியாக தாம்பரம் செல்லும்
அந்தோதயா ரயில் இன்று திங்கட்கிழமை கிடையாது. தாம்பரத்திலிருந்து மயிலாடுதுறை வழியாக நாகர்கோவில் செல்லும் ரயில் இன்று இரவு உண்டு. நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி வரை அந்தோதயா ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.