Madurai

News December 13, 2024

மதுரையில் மகா தீபத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

image

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கார்த்திகை விழா டிச.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் இரு வேலைகளில் சாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். இன்று(டிச.13) மாலை 6 மணி அளவில் திருப்பரங்குன்றம் மலை மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் திருப்பரங்குன்றம் மலை மீது எண்ணெய் சட்டிகள் கொப்பரைகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

News December 13, 2024

வழக்கு, சிறை பற்றி எங்களுக்கு கவலை இல்லை சீமான் பேச்சு

image

மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு கண்டன பொது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, ஒரு போதும் இம்மண்ணில் மீத்தேன், ஈத்தேன், டங்ஸ்டன் சுரங்கங்கள் அமைவதை ஏற்க முடியாது. இதற்காக வழக்கு, சிறை என்றாலும் எங்களுக்கு பயமில்லை என பேசினார்.

News December 13, 2024

திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து

image

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று முருகப்பெருமான் எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தொடர் மழை காரணமாக திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

மதுரை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்கள் உட்கோட்ட அதிகாரியை தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 12, 2024

பிரபல இயக்குனர் சேரனின் பிறந்தநாள் இன்று

image

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் இயக்குனர் சேரன். பல்வேறு திரைப்படங்களை இயக்கி திரை உலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் சேரன். இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மேலூர் பகுதியில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2024

மதுரையில் நாளை கூடுதல் பத்திரப்பதிவு செய்ய முடிவு

image

கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும்,அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லை கூடுதலாக 4 தட்கல் வழங்கப்படும் என தகவல்.

News December 12, 2024

தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

image

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக நாளை மறுநாள் (டிச.14) நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டுள்ளது.

News December 12, 2024

விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் ரத்து

image

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர் அனிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,வருவாய் அலுவலர் மற்றும் விஏஓ இருவரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News December 12, 2024

பண மோசடி – புகார் அளிக்க இதுதான் வழி

image

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பணம் தொடர்பான மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்க வேண்டுமென மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!