Madurai

News December 24, 2024

சதுரகிரி மலை ஏறுவதற்கு 4 நாட்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சதுரகிரி மலையில் சுந்தர் மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்து வந்த வண்ணம் இருப்பது வழக்கம், தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சதுரகிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் டிசம்(27-30) ஆகிய நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு சென்று வர வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்

News December 24, 2024

காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

மதுரை ஊரகக் காவல் துறையில் மது விலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும்30-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரம், மூன்று, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10 ஆயிரத்தை வருகிற 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

News December 23, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான சமயநல்லூர், சோழவந்தான், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய காவல் சரகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மதுரை மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

image

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் பெரியார் வைகை கால்வாய் கண்காணிப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை செய்தபோது சையது ஹபி என்ற உதவி செயற்பொறியாளர் ரூ.1,11,800 ரூபாய் கணக்கில் வராத பணம் வைத்திருந்ததாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News December 23, 2024

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நாளில் 720 பேர் மனு

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (டிச.23) வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நாளில் மட்டும் சுமார் 720 பேர் தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்துள்ளனர். அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 23, 2024

மதுரை ஆட்சியிரிடம் கொடுத்த 2000 மனு மாயம்?

image

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்த நிலையில் அன்றைய தினம் மொத்தம் 790 மனுக்கள் மட்டுமே வந்ததாகவும், 4 மனுக்கள் மட்டுமே இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக வந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 23, 2024

58 கிராம பாசன கால்வாயில் கல்குவாரி – சீமான் கண்டனம்

image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிச.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உசிலம்பட்டியில் உள்ள 58 கிராம பாசனத் திட்டத்தின் கால்வாய் தொட்டிப் பாலத்திற்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்த தமிழக அரசு ஆய்வுகளை மேற்கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

News December 23, 2024

மதுரை எம்.பி. மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

image

மதுரை மாவட்ட கலெக்டரிடம் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளிப்பதாக கூறி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களை பேரணி என்ற பெயரில் கலெக்டர் அலுவலகம் வரவழைத்து அலுவல் நடவடிக்கைகளில் இடையூறு செய்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு வெங்கடேசன் மீது மதுரை கலெக்டரிடம் பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2024

உதவி ஜெய்லர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

image

மதுரை மத்திய சிறை உதவிச் சிறை அலுவலராக இருந்தவர் பாலகுருசாமி. இவா், 14 வயது பள்ளி மாணவியை இரு சக்கரத்தில் அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.மதுரை தெற்கு அனைத்து மகளிா் போலீஸாா் நடத்திய விசாரணையில், பாலகுருசாமி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது, பாலகுருசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News December 23, 2024

பெருமாள் கோயிலில் 67 ஆண்டுகளாக அணையாத ஜோதி!!

image

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள கள்ளிக்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது செங்கப்படை கிராமம். இக்கிராமத்தின் மேற்கு பகுதியின் குளக்கரையில் தேவி, பூதேவி சமேத செங்கனேசவர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் ஒருகால பூஜை நடக்கிறது. 67 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாத ஜோதி ஒன்று எரிந்து கொண்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

error: Content is protected !!