Madurai

News December 26, 2024

அழகர்கோயில் இன்று முதல் நாள் முழுவதும் அன்னதானம் துவக்கம்

image

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்குகிறது.காலை 10 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.வரும் நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 25, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 25, 2024

மேலூரில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம் – வைகோ அறிவிப்பு

image

மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ இன்று (டிச.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுகசார்பில் ஜனவரி 3ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகில் எனது தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.

News December 25, 2024

ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

image

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (42). இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வீட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சமயநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் வெள்ளைச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

News December 25, 2024

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் குறித்து அமைச்சர் பதில்

image

டங்கஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். சுரங்க குத்தகையை மாநில அரசே கையாள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டேன். டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் என 2023 அக்டோபரில் கடிதம் எழுதினோம்.தமிழக அரசிடம் உரிய நில விவரங்களை கேட்டு பெறாமல் மத்திய அரசு ஏலத்தை அறிவித்தது.மாநில அரசின் எதிர்ப்பு இருந்தபோதும் மத்திய அரசு ஏல நடவடிக்கையில் இறங்கியது என தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

மதுரையில் லாரியில் புகையிலை கடத்தல் – 4 பேர் கைது

image

கிருஷ்ணகிரியில் இருந்து இன்று அதிகாலை மதுரைக்கு கண்டெய்னர் லாரி மூலம் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக புதூர் காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சோதனை மேற்கொண்ட போது லாரியில் 94 மூட்டையில் 1400 கிலோ கூலிப், கணேஷ் புகையிலை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பொருட்களை வாங்க வந்த கண்டெய்னர் லாரி உள்பட நான்கு வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News December 25, 2024

திட்டம் முழுமையாக கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் – எம்.பி.

image

மதுரை எம்பி வெங்கடேசன் நேற்று(டிச.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயிர்ப்பான் மையம் சார்ந்த பகுதிகளை தவிர்த்து மீதி பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒன்றிய அரசின் சூழ்ச்சி திட்டத்தை மக்கள் முறியடிப்பார்கள். அதுவரை மக்கள் போராட்டம் தொடரும் என்றார்.

News December 24, 2024

70 சதவிகித வயர்மேன்கள் பணியிடங்கள் காலி – ஆர்டிஐ

image

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, மின் பகிர்மான அலுவலகங்களில் காலியாக உள்ள வயர்மேன் பணியிடங்கள் குறித்த கேள்விக்கு மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்து 267 கம்பியாட்கள் (வயர்மேன்) பணியிடங்களில் 375 பேர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இந்நிலையில், 892 காலிப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மதுரை மண்டல மின் வாரியம் ஆர்டிஐ-ல் பதிலளித்துள்ளது.

News December 24, 2024

ஜல்லிக்கட்டு போட்டி – தமிழ்நாடு அரசு உத்தரவு

image

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது. ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

News December 24, 2024

தாடி வைத்த இஸ்லாமிய காவலர் பணி நீக்கம் ரத்து

image

தமிழக காவல் துறையில் பணியாற்றி வந்த இஸ்லாமிய காவலரை தாடி வைத்ததற்காக பணி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தமிழக உள்துறை செயலாளர் செய்த மேல் முறையீட்டு மனுவை இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. பல காவல் துறை அதிகாரிகள் ரீல்ஸ் வெளியிடும் வேளையில் காவலர் அப்துல் காதர் மீது மட்டும் ஏன் இந்த நடவடிக்கை? என்று நீதிபதி கேள்வி.

error: Content is protected !!