India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 600 கோடி மதிப்பில் முதல் கட்டமாக டைடல் பார்க் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பாக சுற்றுச்சூழல் அனுமதி வேண்டி நேற்று விண்ணப்பம் செய்திருந்தது. இந்த நிலையில், டைடல் பார்க் கட்டிடத்தின் வரைபடம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு கட்டுமான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து ரோட்டரி சங்கங்களும் மடீட்சியாவும் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணி முதல் 2 மணிவரை மதுரை மடீட்சியா ஹாலில் நடைபெறவுள்ளது இந்த வேலைவாய்ப்பு முகாமில் பட்டதாரிகள் 10 வகுப்பு. மற்றும் 12 வகுப்பு ஆகியோர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிக்குமார், பறக்கும் படை தாசில்தார் பழனி குமார் இன்று(டிச.26) மாகாளிப்பட்டி சாலையில் ஆய்வு செய்து போது அவ்வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 45 கிலோ எடை கொண்ட 56 சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 2,520 கிலோ ரேஷன் அரிசி சிவிகே புரம் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வேன் டிரைவர் மணிகண்டனிடம் உணவு கடத்தல் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் இன்று(டிச.26) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில், இன்று(டிச.26) மதியம் தும்பைபட்டி அருகே சாலக்கிப்பட்டியில் உள்ள கடை ஒன்றில் பொருள் வாங்குவதற்காக காரை ரோட்டோரம் நிறுத்திவிட்டு ஒருவர் சென்றார். அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் அந்த காரில் வந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். கொட்டாம்பட்டி போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் வத்சவா நேற்று(டிச.25) பாம்பன் புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் சரிசெய்யப்பட்டு விட்டது. மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். இதன்பிறகு, ரயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
கான்பூரில் இருந்து மதுரைக்கு வரும் ரயில் (வண்டி எண் 01927) வருகிற 1, 8ந் தேதிகளில் மற்றும் மதுரையில் இருந்து நாளை(டிச.27) மற்றும் வருகிற 3, 10ந் தேதிகளில் கான்பூர் புறப்பட்டு செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண் 01928) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், ஜபல்பூரில் இருந்து இன்று(டிச.26) மதுரை வரும் ரயில் மற்றும் மதுரையில் இருந்து 28ந் தேதி புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
மதுரை டிவிஎஸ்நகர் சுகாதார ஆர்வலர் என்.ஜி. மோகன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு மனு அளித்தார். மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 1.33 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் .இவர்களில் 32 பேர் ரேபீஸ் பாதிப்பால் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். மதுரை நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியான இவர் காரில் நாமக்கல் சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே அவரது செல்போன் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டு மாயமானார். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.சாணார்பட்டி பகுதியில் நேற்று தாறுமாறாக ஓடிய காரை மடக்கி பிடித்து பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
கே.புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் தங்கநகை தயாரிப்போர், வணிகம் செய்வோருக்கு கட்டணமில்லா மேலாண்மை மேம்பாட்டு பயிற்சி ஜன.7 முதல்11 வரை அளிக்கப்படுகிறது.தங்க தொழில், வணிகம் செய்யும் சிறு தொழிலுக்கான உத்யம் சான்றிதழ் பெற்றோர் பங்கேற்கலாம். முதலில் வரும் 25 பேருக்கு அனுமதி. தொழிலாளர், மூலப்பொருட்கள், நிதி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது
Sorry, no posts matched your criteria.