Madurai

News January 7, 2025

மதுரையில் 2024-இல் 4.85 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்

image

மதுரை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆணையர் லோகநாதன் பேட்டியில் கடந்த 2024-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் 4,85,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதவிர விபத்துகள் தொடா்பான ஆய்வில், நகரில் 40 சதவீதம் பாதசாரிகள், 56.5 சதவீதம் டூவீலர் ஓட்டினர்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த ஆண்டும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

News January 7, 2025

மதுரையில் அடிக்கடி விபத்தாகும் இடம்-போலீஸ் ஆய்வின் தகவல்

image

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று போலீசாரின் டூவீலர் வாகன விழிப்புணர்வு பேரணியை தமுக்கத்தில் இருந்து கமிஷனர் லோகாதன் துவக்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது, மதுரை நகரில் 76 இடங்களில் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு ஜிக்ஜாக் தடுப்புகள் ரோட்டில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

News January 7, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (06.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. SHARE செய்யவும்.

News January 6, 2025

மதுரை: காவல் துணை ஆணையர் பொறுப்பு ஏற்பு

image

மதுரை மாநகரத்தின் காவல் துணை ஆணையராக (வடக்கு) இதுவரை பணியாற்றிய மதுகுமாரி, மதுரை 6வது பட்டாலியன் எஸ்.பி.,யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு புதிதாக G.S. அனிதா IPS, இன்று (06.01.2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் நெல்லை தலைமையகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று(ஜன.06) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

மதுரையில் பெண் வாக்களார் தான் அதிகம்

image

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர் 27 லட்சத்து 29 ஆயிரத்து 671 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 13 லட்சத்து 40 ஆயிரத்து 159, பெண்கள் 13 லட்சத்து 89 ஆயிரத்து 224, மற்றவர்கள் 288 வாக்காளர்கள் உள்ளனர். இதை இன்று கலெக்டர் சங்கீதா வெளியிட்டார். மதுரையில் பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.

News January 6, 2025

 மதுரை மேயரின் மைத்துனர் உயிரிழப்பு

image

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தின் சகோதரரும், திமுக நிர்வாகியுமான பொன்விஜய் மீது, அவரது மனைவி இலக்கியா குடும்ப தகராறு காரணமாக கோபத்தில் கடந்த 31ம் தேதி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.பொன்விஜய்க்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

News January 6, 2025

தடையை மீறி ஆர்ப்பாட்டம் 434 பேர் கைது

image

சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் திருப்பங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் நேர்த்திகடன் செலுத்த வந்தவர்களை தடுத்த போலீஸ் ஆடு,சேவல்களை மலை மீது கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றனர். அதையடுத்து ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டவர்களை ஆர்டிஒ சமாதனம் செய்து அனுப்பினார். இந்நிலையில் நேற்று குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தி ஈடுப்பட்ட எஸ்டிபிஐ மற்றும் ஜமாத் நிர்வாகிகள் 434 பேரை போலீசார் கைது செய்தனர்

News January 5, 2025

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (05.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

எம்.பி சு.வெங்கடேசனுக்கு நெஞ்சு வலி

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!