Madurai

News January 12, 2025

சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் பேட்டி

image

சோழவந்தானில் யார் அந்த சார் என்ற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் திட்டம் நடைபெறுகிறது. ஆனால் இதுவரை உள்ளூர் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வரவில்லை” என்று மக்கள் புகார் அளித்து வருகிறார்கள் என கூறினார்.

News January 12, 2025

மதுரைக்கு ரூ.5000 கோடியில் திட்ட பணிகள்: அமைச்சர்

image

மதுரையில் மார்ச் மாதம் குடிநீர் திட்டப் பணிகள் விழா நடைபெற உள்ளது. முதல்வர் தலைமையில் இவ்விழா நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு உத்தங்குடியில் நடைபெற்ற திட்டப்பணிகள் தொடக்க விழாவில் தெரிவித்துள்ளார். மேலும் மதுரைக்கு மட்டும் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்.

News January 12, 2025

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மனைவி மறைவு

image

மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் இன்று(ஜன.12) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு மேல்மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயபாய் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News January 12, 2025

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த எஸ்ஐ சஸ்பெண்ட்

image

மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் ஜெயபாண்டி. இவர், கடந்த டிச.13ம் தேதி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

News January 12, 2025

மதுரையில் பதுங்கிருந்த பிரபல குற்றவாளி கைது

image

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கனகு என்ற கனகராஜ். இவர் மீது எண்ணூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை உட்பட குற்ற வழக்குகள் உள்ளது. தனிப்படை போலீசார் இவரை தேடி வந்த நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் டவர் விடுதியில் பதுங்கி இருந்த இவரை, இன்று தனிப்படை போலீசார் துப்பாக்கியுடன் முனையில் சுற்றி வளைத்து கைது செய்து சென்னை கொண்டு சென்றனர்.

News January 12, 2025

133 அடி உயரத்தில் பொங்கல் பானை வரைந்து உலக சாதனை

image

மதுரை மேலூர் திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 133 அடி உயரத்தில், 70 அடி அகலத்தில், 1330 வினாடிக்குள் 133 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மண் தரையில் அடுப்புடன் கூடிய பொங்கல் பானையினை பல்வேறு வண்ணங்களில் பிரம்மாண்டமாக கோலமாக வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர். இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

News January 11, 2025

இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்து மேலூர் பகுதியில் போஸ்டர்!

image

‘டங்ஸ்டன்’ சுரங்கம் அமைவதை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்காக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்க்கு நன்றி என, மேலூர் பொதுமக்கள் சார்பாக நன்றி என10-க்கும் மேற்பட்டபெயர்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் பேசு பொருளாகியுள்ளது.

News January 11, 2025

யார் அந்த சார்கள் என 2 சார்கள்தான் கூற வேண்டும்: ஓபிஎஸ்

image

மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, யார் அந்த சார்? என்று சட்டமன்றத்தில் விவாதம் எழுந்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “2சார்கள்தான் சொல்ல வேண்டும்” என நகைச்சுவையாக பேசி சிரித்துவிட்டு காரில் ஏறி பெரியகுளம் புறப்பட்டார்.

News January 11, 2025

சிறுமி பாலியல் தொல்லை விவகாரம் – ரகசியம் காத்த POLICE?

image

மதுரையில் SSI ஜெய பாண்டி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலை., மாணவி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த வழக்கு குறித்து போலீசார் ரகசியம் காத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவலரே இது போன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் காவல்துறை & பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உங்களுடைய எண்ணம்?

News January 11, 2025

மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த SSI கைது!

image

மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக SSI சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம்(டிச.13) திருக்கார்த்திகைக்கு வந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து, அவர் கழிவறைக்கு சென்றபோது ஜெய பாண்டி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ் போக்சோவில் வழக்கு பதியப்பட்டு, சஸ்பெண்டாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!