Madurai

News January 16, 2025

அலங்கை ஜல்லிக்கட்டில் 56 பேர் காயம்

image

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காலை முதல் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 19 மாடுபிடி வீரர்கள் 10 பார்வையாளர்கள் உள்ளிட்ட 56 பேர் காளைகள் முட்டியதில் காயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 11 பேருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 16, 2025

ஜல்லிக்கட்டை பார்த்து நெகிழ்ந்த அமெரிக்க பயணி

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 5ஆம் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் அதனை கண்டு களித்த அமெரிக்காவைச் சேர்ந்த ரயன் என்பவர் கூறும் போது, இப்போட்டியை முதன் முதலாக இப்போது தான் பார்க்கிறேன். மிக அற்புதமாக உள்ளது. வீரத்தை இளைஞர்கள் வெளிப்படுத்துவதைப் பார்க்கிறேன். அடுத்தடுத்த ஆண்டிலும் ஜல்லிக்கட்டைக் காண கட்டாயம் தமிழகம் வருவேன் என மகிழ்ச்சியுடன் கூறினார்.

News January 16, 2025

நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

image

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, ரூ 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என கூறியுள்ளார்.

News January 16, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் காண உள்ள முதல் காளை

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணி அளவில் தூங்கவுள்ளது.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.கால்நடை மருத்துவ பரிசோதனை கூட்டத்திற்கு முதல் காளையாக ,மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியைச் சேர்ந்த நாளை வருகை தந்துள்ளது.வாடிவாசலில் இருந்து முதல் காளையாக சீறிப்பாய உள்ளது.முதல் காளையோடு காளை உரிமையாளர்களும் உதவியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்

News January 16, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கும் துணை முதல்வர்

image

தைப்பொங்கலை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பாலமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் துணை முதல்வர் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போட்டி எந்தவித குழப்பமும் இன்றி நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

News January 15, 2025

முதலிடம் பிடித்த வீரருக்கு உதட்டில் காயம்

image

பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற நத்தம் பார்த்திபன் நிசான் கார் பரிசை வென்றார். முதலிடம் பிடித்த பார்த்திபனுக்கு உதட்டில் மாடு முட்டியதில் இரத்த காயம் ஏற்பட்டது. ரத்த காயம் ஏற்பட்ட நிலையிலும் தனது வெற்றியை நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

News January 15, 2025

அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு போராட்டம் 

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு 100க்கும் மேற்பட்ட அலங்காநல்லூர் உள்ளூர் மாட்டின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருவதாக மாட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு. காளைகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை வாடிவாசல் முன்பு அமர்ந்து போராடுவதாக அறிவிப்பு.

News January 15, 2025

இரட்டை வழி அணுகுமுறையை கைவிட வேண்டும் – சு.வெ

image

மதுரை – தூத்துக்குடி திட்டம் பற்றி இரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது குறித்து எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சரின் அபத்தமான பதிலை கண்டித்து எல்லோரும் சொன்ன கருத்துகள் இரயில்வே நிர்வாகத்தின் காதில் விழ ஏன் 5 நாட்கள் ஆனது? “தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” சுமத்தும் இரட்டை வழி அணுகுமுறையை இரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்.

News January 15, 2025

மதுரை – தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம்

image

மதுரை – தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டம் குறித்து இன்று மத்திய அமைச்சர் தரப்பில் விளக்கம் வெளிவந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், இன்று வெளியிட்ட அறிக்கையில், ” மதுரை – தூத்துக்குடி அகல இரயில் பாதைத் திட்டத்தின் நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை. இத்திட்டத்தை செயல்படுத்திட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்” என்று கூறியுள்ளார்.

News January 15, 2025

பாலமேடு ஜல்லிகட்டில் சிறந்த காளைக்கு முதல்பரிசு டிராக்டர் 

image

மதுரை பாலமேடு ஜல்லிகட்டில் முதல் பரிசு சத்திரப்பட்டி விஜய தங்கப்பாண்டி காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக டிராக்டர் பரிசும், இரண்டாம் பரிசு சின்னப்பட்டி கார்த்திக் கன்றுடன் கறவை மாடு பரிசும், மூன்றாம் பரிசு குருவித்துறை பவித்ரன் விவசாய ரோட்டவேட்டர் கருவி பரிசுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

error: Content is protected !!