India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை 5 முதல் 6 மணி வரை அறப் போராட்டம் நடத்து ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கான இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த அறப் போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.
மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை உள்ள ரயில் வழித்தடங்களில் மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு டீசல் இன்ஜினுக்கு மாற்றாக மின்சார ரயில்கள் இன்று (பிப்.04) முதல் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து வந்த போடிநாயக்கனூர் பயணிகள் ரயிலும் (வாரத்தில் மூன்று முறை), காலை 9.30 மணிக்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரையிலான (தினசரி) பயணிகள் ரயிலும் இன்று மின்சார மார்க்கமாக இயக்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் கோவிலின் அன்னதான கூடத்தின் அருகே பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் போராட்டத்தின் எதிரொலியாக மதுரை ஆதீனத்திற்கு மடத்தை விட்டு வெளியே வரக்கூடாது என போலீசார் தற்போது தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாள் பேரணி நடத்தப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருக்கும்போது எப்படி ஒரு அமைச்சர் தலைமையில் ஊர்வலமாக செல்ல அனுமதித்திருக்கின்றனர் என நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மதுரை தொகுதி எம்.பி வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது, “உத்தரப் பிரதேசத்தில் 5 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மகாராஷ்டிராவில் 4 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. குஜராத்தில் 2 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு நகரத்தில் மட்டும் தான் 54 கிலோ மீட்டர் மட்டும் தான் மெட்ரோ இயங்குகிறது. மதுரையினுடைய மெட்ரோ எங்கே?” என்று கேள்வி எழுப்பினார்.
சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கை சந்தித்து வரும் ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும், அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். தடை விதிக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க, முன்னாள் காவல் அதிகாரியே அழைப்பு விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மதுரையில் இன்று (பிப்.4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று (பிப்.04) மாலை 5 மணி முதல் 6 மணி வரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை – போடி இடையிலான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் சென்னை சென்ட்ரல் போடி. – சென்னை சென்ட்ரல் ரயில் அதேபோல் தினசரி மதுரை – போடி பாசஞ்சர் ஆகிய ரயில்கள் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதனால் ரயில்வே பயணிகள்மகிழ்ச்சி அடைந்தன.
மதுரை : திருப்பரங்குன்றம் மலையை வைத்து சமீப நாட்களாக நிகழும் சம்பவங்களை முன்னிட்டு, மதுரையில் இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் மதுரை ஆட்சியர் சங்கீதா.இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், இறுதி வழக்காக விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி அம்பேத்கர் பெண்கள் நல மேம்பாட்டு கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்களுக்கு 4 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும்.சீருடையும், பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். 9095054177 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்க நண்பர்களுக்கும் இந்த அறிய வாய்ப்பை பகிருங்கள்
Sorry, no posts matched your criteria.