Madurai

News February 8, 2025

வள்ளலார் நினைவு தினம் பிப்.11ல் டாஸ்மாக் விடுமுறை

image

மதுரை வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு பிப்.11ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் உரிமம் பெற்று இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை மது கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற உரிம தலங்கள் மூடப்பட்டிருக்கும். மாறாக மது விற்பனை நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

மதுரை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

image

மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு intelligence பிரிவிற்கும், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீஸ் கரிமேட்டிற்கும், செல்லூர் கிரைம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் செல்லூருக்கும், வடிவுக்கரசு செல்லூர் குற்றப்பிரிவுக்கும், திருப்பரங்குன்றம் வேதவல்லி மதிச்சியத்திற்கு, ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் இளவேனில் திருப்பரங்குன்றம் மாற்றம் செய்யப்பட்டனர்.

News February 8, 2025

மதுரையில் விரைவில் போக்குவரத்து மாற்றம்

image

தமுக்கம் முதல் நெல்பேட்டை வரையும், பாலம் ஸ்டேஷனில் ஒரு பிரிவுமாக மொத்தம் 3 கி.மீ., தொலைவுக்கு ரூ.190 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஏ.வி., பாலத்தையொட்டி மேற்கு பகுதியில் கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைய உள்ளது. இதனால் விரைவில் ஏ.வி பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

image

தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவணார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது உருவசிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா இன்று (7-2-2025) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு). மு.பூமிநாதான் ஆகியோர் உடன் உள்ளனர்.

News February 7, 2025

மதுரை ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகாரச்சான்று உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம். SHARE IT

News February 7, 2025

மேலூர் அருகே கல்லூரி மாணவர் வெட்டி கொலை

image

மேலூர் அருகே உள்ள வீரபத்திரன்பட்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ராஜபாண்டியன் மகன் பாண்டிக் குமரன்(20).
இவர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றிரவு 10 மணியளவில், இவருக்கு ஒரு போன் கால் வந்ததையடுத்து வெளியில் தமது காரில் சென்றவர். அழகர்கோவில் சாலையில் சூரக்குண்டு விலக்கு அருகில் சாலையோரமாக பலத்த வெட்டு காயங்களோடு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 7, 2025

தமிழறிஞர் தேவநேய பாவாணர் பிறந்தநாள்

image

தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் ஜி. தேவநேயப்பன், ஆனமுதன் தேவநேயப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 7 பிப்ரவரி 1902 ல் பிறந்து 15 ஜனவரி 1981 ல் மறைந்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து 35 க்கும் மேற்பட்ட ஆய்வுத் தொகுதிகளை எழுதிய இந்திய அறிஞர் ஆவார். இவருக்கு மதுரை அண்ணாநகர் பகுதியில் அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

மதுரை ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகாரச்சான்று உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யலாம். SHARE IT

News February 7, 2025

வைகை ஆற்றில் கழிவு கலப்பு – 5 ஆட்சியர்களுக்கு உத்தரவு

image

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News February 7, 2025

மதுரையில் மநீம புதிய நிர்வாகி நியமனம்

image

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகளை, அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்து வருகிறார். அதன்படி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாய அணி மண்டல அமைப்பாளராக, முத்துக்கருப்பன் என்பவரை, கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட முத்துக்கருப்பனுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்கள் மயில்சாமி, அழகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!