India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பரங்குன்றம் மலையை ” சமணர் குன்று ” என அறிவிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று பொதுநல அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள்,மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபான கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக்கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளில் நடத்தப்படும் மதுபானக்கூடங்கள் & அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
மதுரை, நேதாஜி சாலையில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது; உண்டியலில் போட வேண்டும் என அறங்காவலர் செயல் அலுவலர் நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். தட்டு காணிக்கை உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டு, செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார்
மீனாட்சியம்மன் கோயில் தெப்பத்திருவிழா நாளை (பிப்.11) நடைபெறுவதையொட்டி, நாளை அதிகாலை அம்மன், சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை இரு முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தை வலம் வந்து அருள்பாலிப்பர். பின்னர் இரவு 7:00 மணிக்கு மேல் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு புறப்படுவர். சுவாமி மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை நாளை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படும். *ஷேர்
மதுரை மாவட்டத்தில் இன்று (பிப்.09) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை பீபீ குளம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.09) மதுரை மாநகர் மாவட்ட தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரி சக்கரவர்த்தி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி சென்றது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் நேற்று விளக்கமளித்தார் எம்பி.”திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து வக்பு வாரிய தலைவர் என்ற முறையில், நடைமுறையில் இருந்ததை தொடருங்கள் என்று மட்டும் தான் கேட்டேன். மற்ற மத சகோதரர்களுக்கு நான் எதிரானவன் இல்லை” ” என்று கூறியுள்ளார்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தை மாத பிரதோஷம் பௌர்ணமியை முன்னிட்டு நாளை (பிப் 10) முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது நாளை முதல் 13ஆம் தேதி வரை தினமும் காலை 6:30 முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி இரவில் தங்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது
மதுரை மாநகராட்சி 23வது வார்டுக்குட்பட்ட தாகூர் நகர் சந்திப்பு, குலமங்கலம் மெயின் ரோட்டில் செல்லூர் கண்மாயிலிருந்து உபரிநீர் செல்வதற்காக புதிதாக கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வரும் பிப்.12 & 13 ஆகிய 2 நாட்கள் வைகை வடகரை பகுதிகள் முழுவதும் வார்டு எண்: 21 முதல் 35 வரை மற்றும் வார்டு எண்கள்.10, 12, 14, 15, 16, 17 ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. *ஷேர்
மதுரை உத்தங்குடி பகுதியில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரியில்,இன்று மாலை நடைபெறும் விழாவில் இயக்குனரும் நடிகருமான,மதுரையைச் சேர்ந்த சசிகுமார் கலந்து கொள்கிறார்.காலையிலிருந்து நடைபெற்ற பல்வேறு விழாக்களில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய பிறகு, இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் தமிழ் சினிமா என்கின்ற தலைப்பில் பேச உள்ளதாக தகவல்.
Sorry, no posts matched your criteria.