India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விக்கான பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பட்டய படிப்பு போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை 31.03.2025 உடன் முடிவடைகிறது. இந்த சேர்க்கையானது இரண்டு பருவங்களில் நடைபெறும். 2025 இல் காலண்டர் வருடத்திற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேரடியாக கல்வி நிலையங்களில் சென்று பயில இல்லாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
பால் உற்பத்தியாளருக்கு நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தும் முறையை கிராம பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 11ம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் நடத்த உள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மதுரையில் உள்ள ஆவினுக்கு, மாவட்டத்தின் பல கிராம சங்கங்கள் மூலம் தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் அனுப்புகின்றனர்.
மதுரை கோரிப்பாளையத்திலிருந்து சிம்மக்கல், நெல்பேட்டை வழியாகச் செல்லும் வாகனங்கள் தேவா் சிலையிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்புப் பாலத்தில் ஏறி அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பிலிருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி வழியாக கோரிபாளையம் பகுதிக்கு செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை. SHARE செய்யவும்
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஆரப்பாளையம் முதல் அழகர்கோவில் வழியாக சிம்மக்கல் – கோரிப்பாளையம் – ரிசர்வ் லைன்- ஐயர் பங்களா- ஊமச்சிகுளம்- கடச்சனேந்தல் – கள்ளந்திரி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஆரப்பாளையத்திலிருந்து : 11:30 & 17:30 மணிக்கு கிளம்பும் அதேபோல் அழகர்கோவிலில் 10:15 & 16:மணிக்கு கிளம்பும் என அறிவிப்பு.அந்த பகுதியிலுள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 11-ந் தேதி கைப்பாரம், 16-ந் தேதி சூரசம்ஹாரம், 17-ந்தேதி பட்டாபிஷேகம், 18-ந் தேதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 19-ந்தேதி தேரோட்டமும், 20-ந்தேதி தீர்த்த உற்சவமும் நடக்கிறது என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு. மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய மதுரை வைகை அதிவேக விரைவு ரயில் மார்ச் 6,7 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதேபோல எழும்பூர் – புதுச்சேரி இடையேயான பயணிகள் ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயான சேது அதிவேக விரைவு ரயில் மார்ச் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது .
மதுரையில் உள்ள தெருவோர உணவு வியாபாரிகளுக்கு FSSAI பதிவு கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடம் பெயரும் (அ) பயணம் செய்து (நகரக்கூடிய வண்டிகள் மூலம்) பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்யும் தெரு வியாபாரிகள், புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தலுக்கு பதிவு கட்டணம் கிடையாது என உணவு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பி எம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற மார்ச்.15 மற்றும் 16ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்கலாம் என அழைப்பு. *ஷேர் பண்ணுங்க
மதுரை தல்லாகுளம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்(08.03.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு “The Garfield Movie” என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள குழந்தைகள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் செய்யுங்கள்
மதுரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை அண்ணா நகர் பகுதியில் இயங்கி வந்த அம்பிகா திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. அதற்கு முன் கடைசி படமாக நடிகர் ரஜினி நடித்த தளபதி திரைப்படம் இன்று(மார்ச்.5) மாலை 7 மணி சிறப்பு காட்சியாக திரையிடபட உள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருந்த இந்த திரையரங்கத்தில் கடைசி படம் பார்க்க மதுரை மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.