India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் அமைப்பினர் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் பிப்.21ல் நடக்க உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கல்வித் தகுதிக்கேற்ப இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன. பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கல்விச் சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, போட்டோவுடன் அன்று காலை 10:00 மணிக்கு புதுார் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.*ஷேர்
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் போதும், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லைகளுக்கு ஆளாகும் போதும், உயர் கல்விக்கான வழிகாட்டுதல் தேவைப்படும் போதும், அச்சமின்றி அழையுங்கள் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு அழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கு போலீஸ் அக்கா என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் இன்று (13.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் 95.21% (5,040 வழித்தட கி.மீ.களில் 4,799) மின்மயமாக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டம் 94.77% (1,321.84 வழித்தடத்தில் 1,252.09) மின்மயமாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே (52 வழித்தட கி.மீ.) மின்மயமாக்கல் நடந்து வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு; “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதலமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. முதலமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. தவெக தலைவர் விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது” என்றார்.
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டம் சிஞ்சலியில் பிப்.12 முதல் மாயக்காதேவி அம்மன் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து பிப்.13, 20 ஆகிய நாட்களில் புறப்படும் தாதர் வாராந்திர விரைவு ரயில் (11022) தாதரிலிருந்து பிப்.15,22 ஆகிய நாட்களில் புறப்படும். திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயில் (11021) ஆகியவை சிஞ்சலி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
திமு கழக நிர்வாக வசதிக்காக மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், மதுரை வடக்கு, மத்திய, தெற்கு தொகுதி பொறுப்பாளராக கோ.தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மேற்கு தொகுதி பொருப்பாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி எதிரே இருந்த நக்கீரன் நுழைவாயில் இடிக்கும் பொழுது நேற்று விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அலட்சியமாக பாதுகாப்பற்ற முறையில் இடிக்க உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
மதுரை அருகே கீழமாத்துரை சேர்ந்தவர்கள் வினோத் – வேல் முருகாயினி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்ற போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு உயிரிழந்தது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் பால் ஊக்கத் தொகையை பிரதமர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க சேமிப்பு கணக்கிற்கு அனுப்ப வலியுறுத்தி மதுரை ஆவினுக்கு பிப்.24 முதல் பால் நிறுத்தம் செய்து, கறவை மாடுகளுடன் ரோடு மறியல் போராட்டத்தை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் பெரியகருப்பன், உக்கிரபாண்டி, சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.