India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாள் வரை இழப்பீட்டுத் தொகை பெறாத நில உரிமையாளர்கள், அலுவலக வேலை நாட்களில் தங்கள் நில உரிமை தொடர்பான ஆவணங்களுடன் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
அதிமுக குறித்து ‘அண்ணன் ஓபிஎஸ், டிடிவி சார்’ பேச்சுக்களுக்கு நான் கருத்து சொல்லவில்லை. அதிமுகவிற்குள் எந்த பிளவுமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கலாம் என Y பிரிவு பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மன் கோவில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டு தற்போது அவர் மதுரையிலிருந்து பழனி முருகன் கோயிலுக்கு புறப்படுகிறார்.
பரவை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ஆட்சி செய்தியாளர் சந்தித்து பேசுகையில்; செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது. திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும் என்றார்.
மதுரை மாட்டுத்தாவணி நக்கீரன் நுழைவாயில் இடிக்கும் பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கட்டிடத்தை இடிப்பதற்கு முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மதுரை மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை, ரத்னா ஃபேன் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் அருள் பிரகாச தாச சுவாமிகள் என்கிற கிருஷ்ணமூர்த்தி (81) வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடல் சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு மதுரை ரெட்டியார்பட்டியில் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மத்திய மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் ஒரு மாதம் கம்ப்யூட்டர், டெலி காலிங் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பிப்.18 முதல் நடக்கும் இப்பயிற்சியில் பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். இலவச சீருடை, உபகரணங்கள், ஊக்கத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். கூடுதல் விவரங்களை பெற 9095054177 அழைக்கலாம். *ஷேர்
பிப்.16, 2025 அன்று மதுரையிலிருந்து காலை 00.55 மணிக்குப் புறப்படும் ரெயில் எண். 12651 மதுரை – ஹஸ்ரத் நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரை, ரேணிகுண்டா மற்றும் கூடூர் வழியாக இயக்கப்படும். பிப்.15, 20, தேதி மாலை 04.55 மணிக்குப் புறப்படும் ரெயில் எண். 22641 திருவனந்தபுரம் சென்ட்ரல் ஷாலிமார் இருவார சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என மதுரை கோட்டம் தகவல்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் மட்டும் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (15.02.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு Free Birds என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம் என்பதால் வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கலைஞர் நூற்றாண்டு நூலக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. *ஷேர்
Sorry, no posts matched your criteria.