India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க கன்னியாகுமரி மும்பை இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (01005) மும்பையில் இருந்து 10 & 17 தேதிகளில் (திங்கள் கிழமை) அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12.15 மணிக்கு குமரி வந்து சேரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராசர் கல்வியியல் கல்லூரியில் பயின்ற சுமார் எட்டு மாணவர்கள் மத்திய தேசிய தேர்வு முகமை நடத்தும் யூஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக 2017, 2020, 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் சுமார் 8 பேர் இந்த கல்லூரியை சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். அதில், திருமாவளவன் கூறியதை இதன் வாயிலாக முதல்வருக்கு டெடிகேட் பண்ணுகிறேன். முதல்வர் தான் கூட்டணி குறித்து பேசுகிறாரே தவிர யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. திருமாவளவன் நொந்து நூலாகிவிட்டார். வேங்கைவயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை. கூட்டணி கூட்டணி என்று இருக்கும் திருமாவளவன் எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் தான் திருமாவின் நிலைமை என்றார்.
மதுரையில் Ex அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். அதில், மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இங்கே யார் வந்தாலும் எந்த பருப்பும் வேகாது. சாதாரண தொண்டனை நிறுத்தினால் கூட அதிமுக வெற்றி பெறும். முதலில் மதுரைக்கு நிதியை வாங்கி தாருங்கள் திட்டத்தைக் கொண்டு வாருங்கள் என அமைச்சர் மூர்த்திக்கு சவால் விட்டார். அமைச்சர் மூர்த்தி வந்தார், கல்யாண மண்டபம் கட்டினார் என்பது பெரிதல்ல என்றும் விமர்சித்தார்.
மதுரை சுற்றுலாத்துறை சார்பாக அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கலைத் திருவிழா நடைபெறுகிறது. இரண்டாம் நாள் திருவிழாவான இன்று அடுக்கு கரகம் பூங்கரகம் நையாண்டி மேளம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும், இன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் பொதுமக்களுக்கு இலவசம் என்பதால் அனைவரும் பங்கேற்க சுற்றுலாத்துறை அழைப்பு.
மதுரை அரசு மருத்துவமனை விஷக்கடி சிகிச்சைத் துறையின் அறிக்கையில் மதுரையில் 2024 ஆம் ஆண்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட 711 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் தான். தேசிய சுகாதார மையத்திற்கு விஷக்கடி தகவல் மையம் மூலம் உடனடி விபரங்கள் தரப்படுகிறது. தகவல் அனுப்பும் பணியை டீன் அருள்சுந்தரேஸ் குமார் ஆய்வு செய்தார்.
மதுரை சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது கலெக்டர் சங்கீதா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் இந்த பணிக்கு வரும் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும், dphmdu@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் தகுதிகள், பணி விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவைகள் <
தமிழக ஆளுநர் சென்னையில் இருந்து நாளை (மார்ச்.2) காலை விமான மூலம் மதுரைக்கு வந்து பின்பு, சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட பின்பு மீண்டும் மாலை 3 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் விமானம் மூலம் சென்னை செல்கிறார். தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக முழுவதும் மார்ச்.8 அன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பெண்மையை போற்றுவோம் 2025 உரிமை சமத்துவம் என்ற பெயரில் மதுரை மாட்டுத்தாவணி சிப்காட் தொழில்பேட்டையில் வாக்கத்தான்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் இந்திராணி பங்கேற்கிறார். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண்களும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.