India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக மதுரை – திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த புதிய வசதி திருவனந்தபுரம் – மதுரை ரயிலில் (16343) ஜூன் 05 முதலும் மதுரை – திருவனந்தபுரம் ரயிலில் (16344) ஜூன் 06 முதலும் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி குறைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. PG ஆசிரியர் Economics , Commerce, Biology
TG ஆசிரியர் (Hindi0 உட்பட 06 பதவிகளுக்கு B.Ed, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <
மதுரையில் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், நகர்ப்புற, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை தேர்வு செய்து மணிமேகலை விருது வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மணிமேகலை விருதுக்கு தகுதியான சுயஉதவி குழுக்கள், சமுதாய அமைப்புகள் ஏப்ரல் 25க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல்.28 தொடங்கி மே 10 வரை நடக்க உள்ளது. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மே 8ல் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதைக் காண வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முக்கிய திருவிழாக்களில் கட்டணம் வசூலிப்பது பக்திக்கு புறம்பானது என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
திருப்பரங்குன்றத்தில் ஏப்ரல் 14ல் திருக்குட நன்னீராட்டு விழா நடக்க உள்ள நிலையில், ஏப்ரல்
7 ஆம் தேதி முதல் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், கோவிலில் ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாலய யாகசாலை பூஜை தொடங்கி குடமுழுக்கு பணியும் , கோயிலின் மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மகா மண்டபத்தில் மராமத்து பணி நடக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் 2024ம் ஆண்டு SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டது.இச்சம்பவத்தில் 6 மாதங்களாக துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருடிய ரூ.13 கோடி மதி்ப்புள்ள தங்க நகைகள் உசிலம்பட்டியில் உள்ள 30 அடி ஆழகிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.