Madurai

News February 26, 2025

கல்விக்காக 1 கோடி நிலத்தை தானம் வழங்கிய தம்பதிகள்

image

மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர் கோபாலகிருஷ்ணன் – தமிழ்செல்வி தம்பதியர். தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும்என்பதற்காக தங்களது நிலத்தை தானமளித்ததாக கூறினர். கோபாலகிருஷ்ணன்தம்பதியர்.இவர்களின் இந்த செயலை பாராட்ட நினைத்தால் Comment பண்ணி Share செய்யவும்.

News February 26, 2025

1 மணி நேரத்தில் 700 பயணிகளை கையாளும் மதுரை Airport

image

மதுரை விமான நிலைய போக்குவரத்து குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம். அதன்படி, மதுரை விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகளையும், ஒரு ஆண்டிற்கு 1.50 மில்லியன் பயணிகளை கையாளுகிறது. மேலும், நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

News February 26, 2025

தொகுதி மறுவரையரை – தேர்தல் ஆணையர் பதில்

image

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (பிப்.26) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். சிறப்பான தரிசனம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என்று கூறினார். மேலும் இ.வி.எம் இயந்திரம், தொகுதி மறுவரையரை குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றார்.

News February 26, 2025

மதுரை மெட்ரோவால்  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்தா?

image

மதுரையில் பாரம்பரியம் என்று எடுத்துக்கொண்டால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான். ஆகையால் அந்த கோயிலில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை என்ன விதிகளை வகுத்துள்ளதோ, அதன் அடிப்படையில் தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். நிலத்தைத் துளையிட்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதால், எந்த ஆபத்துக்கும் வாய்ப்பில்லை என தகவல்

News February 26, 2025

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்?

image

மதுரை மாநகர மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 32 கி.மீ. தூரத்தில் 26 ரயில் நிறுத்தங்களைக் கொண்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 11 ஆயிரத்து 368 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையோடு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் வழங்க இருப்பதாக திட்ட இயக்குனர் கூறியுள்ளார்.

News February 26, 2025

சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுப்பானடி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 26, 2025

தெருவிளக்கு குறித்து புகார் தெரிவிக்க எண் வெளியீடு

image

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள (100 வார்டு பகுதிகளில்) பொதுமக்கள் தெருவிளக்கு தொடர்பான புகார்களுக்கு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதில் 7871661787 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News February 26, 2025

மேலாளர் கொலை வழக்கில் ஆயுள் சிறை

image

மதுரை தனியார் தங்கும் விடுதி மேலாளரான தர்மராஜன் என்பவர் 7.7.2022 அன்று விடுதியில் தூங்கி கொண்டிருந்த போது கைப்பேசி சாா்ஜரால் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த சங்கிலி மோதிரத்தை திருடிய வழக்கில் ராஜஸ்தானைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன்தாகாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன்தாகாவுக்கு ஆயுள் சிறை, ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி கே. ஜேசப் ஜாய் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News February 26, 2025

பண்பாட்டு தளங்கள் பாதிக்காத வண்ணம் மெட்ரோ அமையும்

image

மதுரை மெட்ரோ திட்டம் குறித்து மேலாண்மை இயக்குனர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறியது; மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11,368 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மதுரையின் பண்பாட்டு தளங்கள் பாதிக்காத வண்ணம் பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து 100 மீட்டர் தள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது என்றார்.

News February 25, 2025

பொருத்தது போதும் பொங்கி எழு – செல்லூர் ராஜு கலகல

image

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு; “பொருத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல நான் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கோயில் மாநகர் குப்பை நகராக வருகிறது. என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது. நடவடிக்கை வேண்டும் என்றார்.

error: Content is protected !!