India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பொன்னூஞ்சல் ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேரில் பார்க்க முடியாத பக்தர்களுக்கு SHARE செய்யவும்.
மதுரையில் சைவமும், வைணவமும் இணைந்து நடத்தும் திருவிழாவாக சித்திரைத் திருவிழா திகழ்கிறது. இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வர்.திருவிழா நடைபெறும் நேரத்தில் கோரிப்பாளையம் வைகை ஆறு மேம்பால கட்டுமானப் பணியும் நடைபெறுவதால், இந்த ஆண்டு திருவிழாவில் திரளும் கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகமும், மாநகர் காவல் துறையும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. மாநில அளவிலான விருது பெரும் வட்டார அளவிலான கட்டமைப்புக்கு 5 லட்சம்,ஊராட்சி அளவிலான கட்டமைப்புக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழு ஆய்வு செய்து மாநில மாவட்ட விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.SHARE
கடுமையான விவாதங்களுக்கு பிறகு, மக்களவையில் நேற்று (ஏப்.2) வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய சு.வெங்கடேசன் எம்பி, “இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிருஸ்தவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும். பாஜகவினருக்கு தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றை முழு நேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்” என்றார்.
டில்லியில் ‘கேலோ இந்தியா பாரா கேம்ஸ்’ போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழகத்தில் இருந்து பாரா வீரர்களுக்கான தடகளம், துாக்குதல், டேபிள் டென்னிஸ், இறகுபந்து, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளில் 190 பேர் பங்கேற்றனர்.மதுரை வீரர் வீராங்கனைகள் 9 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மதுரை மக்களே டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9-ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் விருதுநகர், மதுரை, அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் டிகிரி, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம். SHARE செய்து உதவவும்
கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 11-ம் தேதி அன்று காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடைபெறும். இதில் பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் மணக்கிறார்.பக்தர்களுக்கு SHARE பண்ணவும்.
மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர பக்தர் ஒருவர் திடீரென தடுப்பு மீது ஏறி வரிசைக்குள் புகுந்தார். இதை கவனித்த கோயில் காவலரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான சுந்தரபாண்டி கண்டித்தார். அவருக்கும், பக்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆந்திரா பக்தர்கள் சுந்தரபாண்டியை தாக்கியதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.