India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் ”வணிக, உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க தவறினால் மே 1 முதல் அபராதம் விதிக்கப்படும்” என தொழிலாளர்துறை எச்சரித்துள்ளது. மேலும் இவ்விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 1லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கலாம் என்பதால் விதியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்யவும்.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் மதுரை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நண்பர்களுக்கு குடையை எடுத்துட்டு வெளிய போக சொல்ல மறக்காம SHARE பண்ணுங்க.
மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கோவை தோப்பூன்பட்டியை சேர்ந்த நந்தகோபால் என்பவர் பங்கேற்றார். இவர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளரும் ஆவர். இந்நிலையில் நந்தகோபால் நேற்று திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் குளிக்க சென்ற போது கால் தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அதில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்காதது வருத்தம். இதில் அரசியல் செய்வது தவறு. முதலமைச்சருக்கு வெயில் தாங்காது என்று ஊட்டிக்கு சென்று விட்டார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தனது கடமையை செய்ய தவறிவிட்டார். பிரதமரை அவமதித்த முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி கீழ்காணும் மண்டல வாரியாக முகாம்கள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டு பயன்பெற மதுரை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்படி கள்ளிக்குடி ,செல்லம்பட்டி ,T கல்லுப்பட்டி, ஏழுமலை ,உசிலம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
மதுரையில் இந்த காலத்திலும் மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர். இது பற்றி தெரியாத நண்பருக்கு SHARE பண்ணுங்க.
மதுரை கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபி (45). இவர் ரயில்வே போலீசாரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் முதுகுதண்டுவட பிரச்சனையும் இருந்துள்ளது. இந்நிலையில், மனைவி பிரியா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் கோபி இறந்து கிடந்துள்ளார். மனைவி புகாரில் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் போக்குவரத்து தடை மற்றும் மாற்றம் செய்துள்ளது. மதுரை விமான நிலையம் முழுவதும் (அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர), மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து விரகனுார் ரவுண்டானா சந்திப்பு வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விரகனுார் ரிங்ரோடு, மண்டேலா நகர், அருப்புக்கோட்டை சாலைகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றம்.SHARE IT.
நாகரீகம் வளர்ந்து வரும் நவீன காலத்தில்மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்
சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர் கிராமத்தினர்.
மதுரை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எவருக்கேனும் உதவி தேவைப்படும் ரோந்து பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவிக்கு 100 தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.