India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் கடந்த 2021ஆம் ஆண்டு 190 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பூமிநாதன், சோலை, மாரிமுத்து ஆகிய மூன்று பேருக்கும் பத்தாண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எம்பி வெங்கடேசன் இன்று (பிப்.28) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் கூறுகிறார். மாநில மொழிகளை அழிக்கவும், அதிகாரத்தை பறிக்கவும் அவர்களுக்கு தேவை உள்ளது. அதனை எதிர்த்து எங்களின் மொழியை காப்பாற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. எத்தனை மோடிக்கள், ரவிகள் வந்தாலும் மக்களின் மொழி உணர்வை ஒரு போதும் வீழ்த்த முடியாது என்றார்.
மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பல்வேறு பணிகளுக்கான தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லா பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் மார்ச் 2ம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. தகுதியுடைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தற்காலிக ஆசிரியராக பணிக்கு சேரலாம். இதன் முழு விவரம் பள்ளியின் வலைத்தளத்தில் உள்ளது. ஆசிரியராக துடிக்கும் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
மதுரையில் தமுக்கம் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளில், கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்காக இன்று சோதனை ஓட்டமும் நாளை முதல் 01ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையத்திலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் மீனாட்சி கல்லூரி சாலை வழியாக செல்ல வேண்டும். SHARE செய்யவும்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே வேலம்மாள் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அமர்ந்து விளையாட்டை பார்க்கும் வகையில் கட்டப்படும் இந்த மைதானத்தின் கட்டிட பணி முடிவு பெற உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தால் மதுரை மேலும் ஒரு புதிய அடையாளத்தைப் பெறுகிறது. தற்போது அந்த மைதானத்தின் புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மதுரை உட்பட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ,விருதுநகர், குமரி, உட்பட 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையுடன் இருந்து இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று மழை பெய்தது. அப்போது முதல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் ஜன்னல் வழியாக மழைநீர் உள்ளே சென்றதால் அங்கிருந்த ஆவணங்கள் நனைந்ததாக கூறப்படுகிறது. அந்த ஊழியர்கள் மாடியில் வெயிலில் காய வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வைரலான நிலையில் நிலையில், ஆட்சியர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிக்கு உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் நெல்லியேந்தல் பட்டியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 9944344066, 8428981436 என்ற எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வலியுறுத்தி நாளை (பிப்.28) ஒரு நாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து அடுத்த கட்ட தொடர் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அல்ட்ரா ஸ்கேன் இயக்குவதற்கு பணியாளர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல கோடி செலவில் இயந்திரங்கள் வாங்கி இயக்க பணியாளர்கள் நியமனம் செய்யாவிட்டால் என்ன பயன்? மருத்துவம் போன்ற சேவைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை வைப்பது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்து சுகாதாரத் துறை செயலர், பொது மருத்துவ இயக்குநரகம் பதில் தர உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.