India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி துரைசிங்கம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைசிங்கம் நேற்று வீட்டிற்குள் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தில், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
மதுரையில் சித்திரரை திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் வைத்து சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்புரம் தலையங்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறவுள்ளன. தொடர்ந்து மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மதுரை,வண்டியூர் வைகையாற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.
மகாவீா் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தடையை மீறி விற்பனை செய்தால் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
பங்குசந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் என கூறி ரூ.24 கோடி மோசடி செய்ததாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களாக மூதலீட்டிற்கான லாப தொகை வழங்கியதால் அதை நம்பி முதலீடு செய்துள்ளோம் என புகார் அளிக்க வந்தவர் தெரிவித்துள்ளவனர்.ஒவ்வொருவரும் தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்து இழந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், சீகுபட்டியை சேர்ந்த பால்பாண்டி மனைவி மயிலம்மாள்(43) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட 10வயது மூத்த பெண்ணிடம் இவர் தொடர்பில் இருந்ததை உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இருவரும், மயிலம்மாள் வீட்டு அருகே இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஊமச்சிகுளம் போலீசார் விசாரணை.
மகாவீர் ஜெயந்தி தினம் அன்று(ஏப்.10) மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில்,ஆடு மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இதர உயிரினங்கள் உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா அறிவிப்பு. மேலும் விற்பனை கடைகளை திறந்து வைக்கவும் கூடாது எனவும் தடையை மீறி செயல்படுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலை முன்பாக இன்று ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி திராவிட துறையின் முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரியார் சிலை முன்பாக இன்று ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி திராவிட துறையின் முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 க்கும் மேற்பட்ட கடன் மீட்பு முகவர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். 18 வயது முதல்40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Sorry, no posts matched your criteria.