India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான் உள்ளிட பகுதிகளில் இன்று(மார்ச்.10) இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு இவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம் உசிலம்பட்டி மேலூர் சோழவந்தான் உள்ளிட்ட காவல் சரகங்களில் இன்று(01.03.2025) 14.00 மணி முதல் 17.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளையொட்டி, மதுரை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பாக திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திவ்ய தேசங்களில் 47-வது திவ்ய தேசமாக கருதப்படும், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நாளை 2-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மகம் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக இன்று மாலை விசுவசேனர் புறப்பாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நாளை 2-ந் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவில் அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை நடைபெறும்.
மதுரையில் தமுக்கம் கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளில், கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்காக இன்று சோதனை ஓட்டமும் நாளை முதல் 01ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையத்திலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் மீனாட்சி கல்லூரி சாலை வழியாக செல்ல வேண்டும். SHARE செய்யவும்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,18,853 அமைப்பு சாரா தொழிலாளர் பயனாளிகள் ரூ.100.33 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணியளவில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் சுவாமி பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சென்று, அங்கு திருக்கல்யாண உத்ஸவத்தில் எழுந்தருளுவா். அன்று நள்ளிரவு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வந்து சோ்த்தியாவாா்கள். அன்றைய தினம் நடை சாத்தப்பட்டிருக்கும்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச்.01) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு “The Emoji Movie” என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கலைஞர் நூற்றாண்டு நூலகம் அழைப்பு விடுத்துள்ளது.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஊமச்சிகுளம் ஆகிய காவல் சரகங்களுக்கு உட்டபட்ட பகுதியில் இன்று (28.02.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என அறிவிப்பு.
மதுரையில் கடந்த 2021ஆம் ஆண்டு 190 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பூமிநாதன், சோலை, மாரிமுத்து ஆகிய மூன்று பேருக்கும் பத்தாண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.