Madurai

News March 25, 2025

மதுரை: சாலைகளில் சாகசமா ? காவல்துறை வைத்த செக்!

image

மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சிலர் பைக் ரேஸ், சாகசங்கள் செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்தநிலையில் மதுரை மாநகரில் சாலை விதிமீறல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க 8300021100 என்கிற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படம் எடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியின் பெயரை குறிப்பிட்டு அனுப்பலாம்  என காவல்துறையினர்  வேண்டுகோள் வைத்துள்ளனர்.

News March 25, 2025

மதுரைக்கு புதிய டிஐஜி நியமனம்

image

மதுரை காவல் சரகத்தின் டிஐஜி பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜி யாக நியமனம் செய்து உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பத்து டிஐஜிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News March 25, 2025

காசநோய் பாதிப்பில்லா 92 ஊராட்சிகள்

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா பங்கேற்றுப் பேசும்போது, இந்திய அளவில் 25 லட்சம் பேரும், தமிழகத்தில் 1 லட்சம் பேரும், மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரம் பேரும் காசநோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.மேலும் கடந்த ஆண்டு, மதுரை மாவட்டத்தில் காசநோய் பாதிப்பில்லாத 92 ஊராட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 24, 2025

மதுரையில் 3நாட்கள் குடிநீர் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையத்தில் உள்ள நீர்நிலை தேக்க தொட்டியின் அருகில் செல்லும் மெயின் பிரதான குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி தரப்பினர் மேற்கொள்ள இருப்பதாலும் , புதிய குழாய்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள இருப்பதால் மூன்று நாட்கள் ( மார்ச் 26,27,28) மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக மதுரை மாநகராட்சி அறிவிப்பு

News March 24, 2025

மதுரை மாநகராட்சியின் முடிவில் திடீர் மாற்றம்

image

மதுரை மாநகராட்சியில் மாடுகள் வளர்ப்புக்கு ரூ.500, குதிரை ரூ.750, ஆடு ரூ.150, பன்றி ரூ.500, நாய், பூனை ரூ.5750 என கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கட்டணம் விதிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதால் திருத்தப்பட்ட கட்டணத்தை செயல்படுத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 24, 2025

சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் சாப்டூர் அடுத்து அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்யச் செல்வது வழக்கம். இந்நிலையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். SHARE செய்யவும்.

News March 24, 2025

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பலி

image

வாடிப்பட்டி விராலிப்பட்டியை சேர்ந்தவர் சிவா-பவித்ரா தம்பதி. இவர்களுக்கு சாய்குமார் (8), சிவகார்த்திக் (4) ஆகிய 2மகன்கள் உள்ளனர். நேற்று பவித்ரா வீட்டில் சமையல் செய்த போது வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் சிவகார்த்திக் திடீரென மயமானார். தேடி பார்த்தபோது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் சிவகார்த்திக் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News March 24, 2025

கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை 24-03-2025 வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

News March 24, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!