Madurai

News March 14, 2025

மதுரைக்கு பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶️மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் அருங்காட்சியகம்

▶️மதுரையில் மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள்

▶️மதுரையில் முதியவர்களுக்கு அன்புச் சோலை மையங்கள்

▶️மதுரையில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள்

▶️மேலூரில் காலணி தொழில் பூங்கா

▶️மதுரையில் புதிய தொழிற்பேட்டைகள்

உங்க ஊர் அப்டேட்ட உங்க நண்பருக்கு SHARE பன்னுங்க

News March 14, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை அரிசி கடைக்காரர் மீது புகார்

image

சோழவந்தாள் பகுதியை சேர்ந்த செல்வப்பாண்டி,அரிசி கடை வைத்து வருகிறார். இவர் வாடிக்கையாளர் ஒருவரது வீட்டுக்கு அரிசி மூடையை கொண்டு சென்றார். அங்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மட்டும் இருந்தார். செல்லப்பாண்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை

News March 14, 2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

image

உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை கோவில் நிர்வாக நடத்தப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு ஏற்றினார்கள். திருவிளக்கு பூஜை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.அம்மன் அருள் பெற SHARE பன்னுங்க.

News March 13, 2025

மதுரை : இதை செய்தால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் பகுதி காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்கள் ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குப்பை கொட்டும் நபர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

News March 13, 2025

மதுரை : இதை செய்தால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் பகுதி காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர்நிலைகள், திறந்த வெளி கால்வாய்கள் ஆகிய இடங்களில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குப்பை கொட்டும் நபர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

News March 13, 2025

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை

image

மதுரை : கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரின் ஜீவ சமாதியில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில், பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை இன்று ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு. “உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை அனுமதி வழங்க கூடாது” என்றும் உத்தரவிட்டது

News March 13, 2025

மதுரையில் முதல்வர் மருந்தகத்தால் 4,288 பேர் பயன்

image

மதுரை நோயாளிகள் அதிக விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது, நீரழிவு ரத்த அழுத்தம் பல்வேறு பாதிப்புகளினால் தொடர்ந்து மருந்துகள் வாங்க வேண்டிய நோயாளிகள் கவலை அடைந்தனர். அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் 50 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன இவற்றின் மூலம் நேற்று வரை 4,288 பேர் பல்வேறு வகையான மருந்துகள் வாங்கி பயனடைந்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

News March 13, 2025

சொத்து வரி கட்டாவிட்டால் கட்டடம் முன்பு குப்பைத் தொட்டி

image

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி நீண்ட காலம் கட்டாமல் பாக்கி வைத்துள்ள வணிக கட்டங்கள் மட்டுமில்லாது வீடுகள் முன்பும் மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் கொண்டு வரும் ‘குப்பை தொட்டி’களை வைத்து வரி கட்ட கூறி நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறார்கள். மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை காரணமாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வரி கட்ட சொல்லி உங்க நண்பருக்கு இத SHARE பன்னுங்க.

News March 13, 2025

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு

image

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை கடைக்க சென்ற சிறுமி சற்று நேரத்தில் வந்து சிலர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறினார். விசாரணையில், டூவீலர் மெக்கானிக் முத்துகுமார் 18, சிறுமியுடன் பள்ளியில் படிக்கும் பிளஸ் 12 மாணவர்கள் இருவர்,10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மற்றும் 17 வயது சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

News March 12, 2025

மதுரை:பீஸ் கட்ட பணம் இன்றி மாணவன் தற்கொலை 

image

மதுரை புது விளாங்குடி கணபதி முதல் தெருவை சேர்ந்தவர் இளமாறன் .மதுரையில் உள்ள காமராஜர் யூனிவர்சிட்டியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வுக்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் தேர்வு எழுத முடியாத விரக்தியில் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையிலேயே இவரது தயார் பீஸ் கட்டியது தெரியாமல் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

error: Content is protected !!