Madurai

News March 16, 2025

ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் அதிசய கோவில்

image

மீனாட்சியம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில். இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது சிறப்பாகும். இது பற்றி உங்களுக்கு தெரியுமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.தெரியாத உங்க நண்பருக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

12-ம் நூற்றாண்டு பெருமாள் சிற்பம்

image

மதுரை திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன், கல்லூரி மாணவர் தர்மராஜா, ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு செய்தபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெருமாள் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோயில் பாண்டியர் காலத்தில் சிறந்த வழிபாட்டில் இருந்துள்ளதை இச்சிற்பங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம், என தெரிவித்தனர்.

News March 16, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (15.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 15, 2025

மதுரை : நடைப்பயிற்சி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(52), இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதால் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இரு மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை மறு வாழ்வு மையத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இறப்பு குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை .

News March 15, 2025

மதுரைக்கு வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள்

image

வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் மதுரைக்கு வரும் சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு:

▶️மதுரை,தூத்துக்குடியில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம்

▶️ரூ.20 கோடியில் உசிலம்பட்டி 100 மெக்ரிட் டன் சேமிபு கிடங்கு

▶️மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3000 ஆயிரம் ஏக்கரில் மல்லி பயிர் செய்ய ஊக்குவிக்கப்படும்

News March 15, 2025

வைகை, பல்லவன் ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி

image

மதுரை – சென்னை வைகை (12635/12636) மற்றும் சென்னை – காரைக்குடி பல்லவன் (12605/12606) விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப்பு (கோச்) இணைக்கப்படும். ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி, மே 11 முதல் இந்த மாற்றம் செயல்படுத்தப்படும். பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்வு, அதிக கூட்ட நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணங்களை திட்டமிடலாம்.

News March 15, 2025

மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

மதுரை வில்லூர் ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன் (50). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இருளாயி (9) என்ற மகள் இருந்தார். கடந்த 2018ல் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு குறித்து அவ்வப்போது தனது தாய்வழி தாத்தாவிடம் தெரிவித்தாக மகள் இருளாயியை அவரது தந்தை முருகன் கோடாரியால் தாக்கி கொலை செய்தார். இவ்வழக்கில் தந்தை முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 14, 2025

மதுரை மாநகராட்சிக்கு 5 கோடி :புதிய அறிவிப்பு  

image

மதுரை மாநகராட்சி உட்பட தமிழகம்  முழுவதும் இருக்கக்கூடிய 30 மாநகராட்சி பகுதிகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய  நூலகம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது .

News March 14, 2025

மதுரை :குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது . அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ல் நடத்தப்படவுள்ள  குரூப்-4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் 17 தேதி முதல் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்.

News March 14, 2025

மதுரையில் வேலைவாய்ப்பு 

image

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் தமிழ் ஏஐ ஆராய்ச்சி திட்டத்திற்கான ஆராய்ச்சி இணை பணியிடம் காலியாக உள்ளது.  M.E (CSE), M.Tech (IT), MCA, M.Sc (Comp. Sci). AI/ML/DL/NLP தொடர்பான தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை www.tce.edu என்ற பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பம் செய்யலாம் . விண்ணப்பிக்க கடைசி நாள் 30.03.2025. மற்றவர்களுக்கும்  ஷேர் செய்து உதவுங்கள் 

error: Content is protected !!