India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று(மார்ச் 18) 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக இன்று அதிகாலை 4:00 மணிக்கு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கின்றனர். எனவே இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்படும்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள டி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சந்தனகருப்பு- கிருஷ்ணவேணி தம்பதியரின் மகனான கேசவன்(15.3.2025), வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தவறுதலாக கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை 21-ல்
நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலை தேடுவோர் இந்த <
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மதுரை மேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் வகையில் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர் கச்சிராயிருப்பு மகேஷ்பாண்டி (21) உயிரிழந்த நிலையில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71 பேர் காயமடைந்தனர்.
மதுரை கச்சைகட்குப் பெருமாள் நகரைச் சேர்ந்த முனியசாமி. இவர் நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். ஜன.24 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சென்ற இவரிடம் வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் முனியசாமியை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல்லை பறித்துச் சென்றனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்து ரத்தினக்கல்லை பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாநகரில் இன்று (16.03.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை பகிரவும்.
மதுரையின் இரண்டாவது நியூசிலாந்து கல்வி கண்காட்சி (Education Fair) இன்று (மார்ச்.16) மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கண்காட்சியை ரோட்டரி கவர்னர் ரோட்டரியன் ராஜா கோவிந்தசாமி துவக்கி வைத்தார். கிளப் ஆப் மதுரை, மெட்ரோ ஹெரிடேஜ், ஏ.கே. கன்சால் டென்சன், மற்றும் எஜூகேஷனல் நியூசிலாந்து அரசுடன் இணைந்து நடத்தினர். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.
அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏது தழுவுதல் அரங்கத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.காலை 7 மணி தொடங்கிய இந்த போட்டியில் சோழவந்தான் அருகே உள்ள கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாண்டி என்ற மாடுபிடி வீரர் களத்தில் ஜல்லிக்கட்டு காளை மார்பில் குத்தியதில் பலத்த காயமடைந்த நிலையில்.சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விவசாயிகள் உடனடியாக அடையாள எண் பெற தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் கவுரவ நிதி பெறுவது நிறுத்தம் செய்யப்படும். மேலும், விவசாயம் சார்ந்த 14 துறைகளில் திட்ட மானிய சலுகைகளையும் பெற முடியாது. மத்திய அரசு உத்தரவுப்படி பி.எம்.கிசான் 20வது தவணை பெற்றிட மத்திய அரசு வழங்கும் அடையாள எண் பெறுவது மிகவும் அவசியமாகும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
மீனாட்சியம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில். இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும். அதாவது தினமும் வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவது சிறப்பாகும். இது பற்றி உங்களுக்கு தெரியுமா என்பதை கமெண்ட் பண்ணுங்க.தெரியாத உங்க நண்பருக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.