Madurai

News April 2, 2025

சித்திரை திருவிழாவில் கட்டண வசூலுக்கு எதிர்ப்பு

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல்.28 தொடங்கி மே 10 வரை நடக்க உள்ளது. மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மே 8ல் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதைக் காண வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முக்கிய திருவிழாக்களில் கட்டணம் வசூலிப்பது பக்திக்கு புறம்பானது என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

News April 1, 2025

திருப்பரங்குன்றத்திற்கு பக்தர்கள் செல்ல தடை

image

திருப்பரங்குன்றத்தில் ஏப்ரல் 14ல் திருக்குட நன்னீராட்டு விழா நடக்க உள்ள நிலையில், ஏப்ரல்
7 ஆம் தேதி முதல் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், கோவிலில் ஏப்ரல் 7 ஆம் தேதி பாலாலய யாகசாலை பூஜை தொடங்கி குடமுழுக்கு பணியும் , கோயிலின் மூலஸ்தானம் அர்த்தமண்டபம் மகா மண்டபத்தில் மராமத்து பணி நடக்க உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News April 1, 2025

மதுரையில் வேலை வாய்ப்பு

image

மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளியில் PGT, TGT, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட 06 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு
B.Ed, BA, M.Com, M.Sc, MA, MBA படித்த 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் <>இந்த<<>> தளத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.21250 -27,500 வரை ஊதியம் கிடைக்கும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News April 1, 2025

மதுரையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

உசிலம்பட்டி கிணற்றிலிருந்து ரூ.13 கோடி தங்க நகை மீட்பு

image

கர்நாடகாவில் 2024ம் ஆண்டு SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17.7 கிலோ தங்க நகைகள் மர்மநபர்களால் திருடப்பட்டது.இச்சம்பவத்தில் 6 மாதங்களாக துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருடிய ரூ.13 கோடி மதி்ப்புள்ள தங்க நகைகள் உசிலம்பட்டியில் உள்ள 30 அடி ஆழகிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

BREAKING :மதுரையில் என்கவுண்டர் – ஒருவர் பலி

image

மதுரை மாவட்டம் சிந்தாமணி அருகே போலீஸ் என்கவுண்டரில் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் சுட்டுக்கொலை. காரில் கஞ்சா கடத்தி சென்ற போது போலீசார் துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது சுபாஷ் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழப்பு.கொல்லப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 31, 2025

மதுரை : மேயர் தலைமையில் நாளை குறைதீர் கூட்டம்

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் வாரந்தோறும் மண்டல கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் மண்டலம் இரண்டில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நாளை(ஏப்ரல்.01) காலை 10:30 மணிக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

மதுரையில் பைக் ரேஸா? காவல்துறை செக் 

image

சமீபகாலமாக மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் அதிக செயல்திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள் மூலம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கி  வருகின்றனர். இந்நிலையில் அவர்களைக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்டறிந்து 30 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News March 31, 2025

மதுரை : நன்மை தரும் சிவன் கோவில் 

image

மதுரை திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த கோவில்தான் பால்சுனை கண்ட சிவபெருமான் திருக்கோவில். அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ளது, கோவிலின் நுழைவாயிலிலே மாலையினால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமான் காட்சியளிக்கின்றார். இந்த கோயிலில் வழிபாடு நடத்தினால் குடும்பத்தில் உண்டான சிக்கல்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

News March 31, 2025

ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

image

மதுரை ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பயணிகள் ஆட்டோவின் பின்னால் மோதியது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.அங்கு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

error: Content is protected !!