India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை செயல்பட்ட அதிஷ்டம் பார்ம் அலைடு லிமிடெட் என்ற நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி 100 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருப்புவனத்தை சேர்ந்த நிதி நிறுவன பங்குதாரர்கள் ஜெயக்குமார், அவரது மனைவி வெண்ணிலா, சாந்தி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரியில் தமிழ்நாடு மேய்ச்சலியம் மாநாட்டிற்கான புதிய லோகோ வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மேய்ச்சலியம் மாநாட்டு லோகோவை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.
வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் 1,05,002 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்காக, நொடிக்கு 1130 கனஅடி நீர் திறக்கப்பத்துள்ளது. வைகை அணைக்கு நொடிக்கு 561 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், நொடிக்கு 1130 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த 06.09.2024 முதல் ‘புத்தகத் திருவிழா 2024″ நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அளித்து வரும் வரவேற்பை தொடர்ந்து 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் நடத்திட திட்டமிடப்பட்டிருந்த புத்தகத் திருவிழா 2024″ மேலும் ஒரு நாள் (17.09.2024) அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை – சண்டிகர் ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.15) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சண்டிகர் விரைவு ரயில் (12687) நாளை திங்கட்கிழமை (செப்.16) அதிகாலை 02.30 மணிக்கு 175 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்காக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து வைத்தார். பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு நீரிருப்பை பொறுத்து 8,461 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 5,697 ஏக்கரும்,மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 24,811 ஏக்கரும் பாசன வசதி பெரும்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது, விஜய் மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. ஆனால் மாநாடு நடக்க வேண்டும் என்று தான் அனுமதி வழங்குவார்கள், நிபந்தனை விதிப்பார்கள், ஆனால் மாநாடு நடக்கவே கூடாது என பல்வேறு நிபந்தனை வைத்துள்ளது இந்த திமுக அரசு என குற்றம் சாட்டினார்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:- மதுரை மாவட்டத்தில் சமூகப் பொறுப்புணர்வுடன் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய ஏதுவாக தங்கள் நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வேண்டும். தனியார் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 8778945248 என்ற எண்ணில் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளிக்குடி தாலுகாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி 31, சில நாட்களுக்கு முன் இரவு குடிபோதையில் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகள் சத்தம் போட்டதால் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன் எழுந்து சிறுமியைக் காப்பாற்றினர். இது குறித்து ஊர் நல அலுவலர் கவுசல்யா புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் தொழிலாளியைக் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் ‘குரூப்- 2’ தேர்வில் 146 மையங்களில் நடைபெற்றது. மதுரை வடக்கு வட்டத்தில் 52, மதுரை தெற்கு வட்டத்தில் 43, மேலூா் வட்டத்தில் 11, திருப்பரங்குன்றம் வட்டத்தில் 26, உசிலம்பட்டி வட்டத்தில் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கு 42,895 போ் விண்ணப்பித்திருந்தனர். இதில், 32,106 போ் தோ்வு எழுதினா். 10,789 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
Sorry, no posts matched your criteria.