India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணித்திருவிழாவின் இறுதி நாளான இன்று (16.09.2024) கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை ஊமச்சிகுளம் டிஎஸ்பியாக இருந்த சந்திரசேகர் தற்போது மதுரை துணை கமிஷனராக உள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் அண்ணா பதக்கம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் விளக்குத்தூண் க்ரைம் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் மகேஷ் குமாருக்கும் அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதக்கத்துடன் ரொக்க பரிசும் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2019 டிசம்பர் 31 வரை பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்றால் அதற்கான தாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பெயர் பதிவுடன் வரும் 2024 டிசம்பர் 31 வரை மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை அருகே வேடர் புளியங்குளத்தில் புதிய பேருந்து பயணிகள் நிழல்குடை மற்றும் தென்பழஞ்சி பகுதியில் நாடக மேடை திறப்பு விழா இன்று (செப்.16) நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி அன்னபூர்ணா உரிமையாளர் நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது, பாஜகவின் அகங்காரத்தின் வெளிப்பாடு என கூறினார்.
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகளும் நாளை(செப்.17) மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மிலாடி நபி தினத்தில் மது கடைகளை திறந்து மது விற்பனை செய்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்த ஆவணி மூல திருவிழா நேற்று இரவுடன் நிறைவடைந்ததாக கோவில் நிர்வாகம் அறிவுத்துள்ளது. மேலும் வரும் 20.09.2024 வெள்ளிக்கிழமை அன்று சுந்தரேஸ்வரருக்கு சாந்தபிஷேகம் மற்றும் மஹா ருத்ராபிசேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலூர் அருகே கத்தப்பட்டி ராஜா – மலைச்செல்வி தம்பதியினர் அலங்காநல்லூரை சேர்ந்த வினோத்திடம் பெற்ற வட்டி கடனை கேட்டு வினோத் அவரது நண்பர் சிவாவுடன் (27) வீட்டிற்கு வந்து ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்த தம்பதி கடந்த செப்.11ம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து வினோத், சிவா ஆகிய இருவரை போலீசார் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று, நலிந்த நிலையிலுள்ள தமிழக முன்னாள் வீரர்கள் மாதம் ரூ.6000 ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது. தகுதியுடைய நலிந்த நிலையில் உள்ள வீரர்கள் செப்.30க்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று(செப்.15) அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெயில் தாக்கத்தில் பொதுமக்கள் பிற்பகல் நேரத்தில் வெளியே செல்லவதில் இன்னல்களை சந்தித்தனர்.
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், தமுக்கம் அரங்கத்தில் புத்தகத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இங்கு முன்னணி பதிப்பகங்களின் அரங்குகளும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத் திருவிழா திங்கள்கிழமை வரை (செப் 16) நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு வருகிற செப்.17-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.