India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இன்று (செப்.18) முதல் அக்.8 வரை இத்தடத்திலான ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு – செங்கோட்டை விரைவு ரயில் இன்று முதல் அக்.7 வரை திண்டுக்கல் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடை பெற்ற ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான புட்டு திருவிழாவிற்காக வந்திருந்த திருவாதவூர் மாணிக்கவாசகர் திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று மாலை மதுரை கீழ ஆவணி மூல வீதி மண்டகப்படியிலிருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டார். இன்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்கி விட்டு நாளை காலை திருவாதவூருக்கு செல்கிறார்.
மதுரையில் இன்று வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இன்று மதுரை விமான நிலையத்தில் 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாத வரலாற்றில் இப்படியொரு வெப்பநிலையை மதுரை மக்கள் சந்தித்ததில்லை என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக 100 முதல் 104°F வெப்பநிலை பதிவான நிலையில் இன்று உச்சபட்சமாக 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தவறாக வழி நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனருக்கு
ரூ.5 லட்சம் அபராதமாக விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017- 18 ஆம் கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படாமல் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தாக்கல் செய்த மனுவில் அதிரடி உத்தரவு.
தமிழகத்தில் போதை பொருளான கூல் லீப் தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையிலும், பிற மாநிலங்களில் இருந்து வரும் கூல் லீப்பை பயன்படுத்தும் மாணவர்களின் மூளை திறன் மறைந்து வருகிறது என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப இன்று உத்தரவிட்டார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கபடி உள்விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது. கபடி போட்டிக்கு நிரந்தரமாக உள்விளையாட்டு அரங்கு தேவை என வீரர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அதற்கான இடவசதியை ஆய்வு செய்து விளையாட்டு விடுதியின் கால்பந்து அரங்குக்கு முன்புள்ள இடத்தில் மைதானம் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனால் மதுரை கபடி வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிலையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றுக்குள் (17.09.2024) மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
உசிலம்பட்டி வலங்காகுளம் பின்னத்தேவர், ஜெயா தம்பதிக்கு இரு மகன்களை படிக்க வைத்ததோடு வீடு, கார் தேவையான வசதி உருவாக்கிய நிலையில்
பின்னத்தேவர், கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மகன் சிவராமன் தன் திருமணத்தில் தந்தை இருக்க வேண்டி ரூ.1.50 லட்சம் மதிப்பில் தனது தந்தை பின்னத் தேவரின் முழு உருவ மெழுகு சிலையை உருவாக்கி மதுரையில் இன்று திருமணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
மதுரை கொடிக்குளம் கிராமத்தில் யானைமலை அடிவாரத்தில் பழமை வாய்ந்த பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விநாயகரை வணங்கினால் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோவிலிருந்து வீட்டுக்கு விபூதி எடுத்து செல்ல கூடாது, பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற கட்டுப்பாடு இன்றளவும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104. 54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதமடித்தது. நாகை, தஞ்சை, ஈரோட்டில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்திய நிலையில் தமிழக அளவில் அதிகபட்சமாக மதுரையில் 104.54 டிகிரி வெப்பம் பதிவானதால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.