India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பட்டா ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை கள ஆய்வு செய்வது தொடர்பாக இன்று திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆணையின் மூலம் குமரேசன் என்ற சமூக ஆர்வலர் கள ஆய்வு செய்தார். ஆய்வில் 276 பக்கங்கள் கொண்ட சொத்து சம்மந்தமான ஆவணங்களை அதிகாரிகளின் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
மதுரையிலிருந்து சண்டிகருக்கு செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்று (18.09.2024) இரவு 23.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை (19.09.2024) காலை 07.15 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரயில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.
மதுரையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்திய அளவில் நேற்று மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவான நிலையில் இன்றும் தமிழக அளவில் அதிகபட்சமாக 104.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் வெயிலின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
மதுரை அருகே குலமங்கலம் ஊராட்சி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. குலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட எழும்பூர் கிராமம் முதல் முனியாண்டி கோயில்வரை 2022 ல் பேவர் பிளாக் ரோடு அமைத்ததில் நடந்துள்ள முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை வரும் செப்.27 க்கு ஒத்திவைத்து உத்தரவு.
மதுரை கோ.புதூரில் தமிழக அரசின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 25.10.2024 வரை (ஞாயிறுக்கிழமைகள் உட்பட) கொலு பொம்மைகள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தசாவதாரம் செட் விநாயகர் செட், தர்பார் செட் அஷ்டலட்சுமி செட், மும்மூர்த்திசெட், கிரிவலம்செட் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ள நிலையில் அனைத்து பொம்மைகளுக்கும் 10% விலை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குண்டாசில் கைது செய்யும் போது உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை வழங்க தமிழக அரசின் உள்துறை துணைச்செயலாளர், தென்மண்டல காவல்துறை தலைவர் நாளை மாலை 5 மணிக்கு நீதிமன்றம் வரவேண்டும் என ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் உரிய விதிகளை பின்பற்றாததால் பல குண்டாஸ் வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்ய நேரிடுவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 03.10.2024 முதல் 12.10.2024 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. உற்சவத்தில் 12.10.2024 தேதி அன்று மாலையில் பசுமலையில் அமைந்துள்ள அம்புபோடும் மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு வைத்து 6 ஆம் தேதி பட்டபிஷேகமும், 7 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப். 20 காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. அனைத்துறை அதிகாரிகள் இந்த முகாமில் பங்கேற்கின்றனர். அனைத்து விவசாயிகளும் பங்கேற்று விவசாயம் கண்மாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் கடந்த 6 ஆம் தேதி துவங்கிய புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. புத்தக திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.4 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்ட செய்தி குறிப்பில்:- தமிழக காவல்துறை சட்டம் 1888 -பிரிவு 41 மற்றும் 41(ஏ)- படி மதுரை மாநகர் பகுதிகளில் பொது,தனியார் இடங்களில் அனுமதியின்றி கூடுதல், போராட்டத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களுடன் கூடுதல் மற்றும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்த 15 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி இன்று முதல் அக்.2 வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
Sorry, no posts matched your criteria.