India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் அமைப்பின் கூட்டம் மதுரை ப்ரொடக்டிவிட்டி கவுன்சில் ஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைப்பில் பணி புரிய கூடிய ட்ராபிக் வார்டன்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் பெண்கள் தங்கும் விடுதிகளை நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கும் விடுதிகளை Tamil Nadu Hostels and Homes for Women and Children (Regulation) Act 2014 ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் உள்ள மகளிர் விடுதிகள் உடனடியாக ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்துகொள்ள மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மாநகராட்சியில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் 156 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 45 நகர்ப்புற துணை நிலைய செவிலியர்கள் மூலம் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 12.53 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4.32 லட்சம் பேருக்கு தொற்றா நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை கடந்த 2012 முதல் நடைபெற்று வருகிறது. மாநில அளவில் இந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் பெறுவதில் இரண்டாம் இடத்திலும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முதலாம் இடத்திலும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் சேவை உள்ளது. சாதித்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு ஆட்சியர், எம்பி உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் மதுரை அரசு மருத்துவமனை, வட்டார அளவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ‘காய்ச்சல் வார்டுகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவமழை நெருங்குவதால் நோய்த்தொற்று பரவல் மற்றும் டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த உத்தரவிட்டார்.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் செப் 28ல் அமெரிக்கன் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டபடிப்பு, ஐடிஐ டிப்ளமோ கல்வித் தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் விவரங்களுக்கு 88077 23434, 63719 72554 தொடர்பு கொள்ளலாம். என வேலைவாய்ப்பு மைய இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் சாமநத்தம் கண்மாயில் இயற்கை பண்பாட்டு மையம் பறவையியல் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஆய்வில் இக்கண்மாயில் தங்கி கூடுகட்டு வாழும் பறவை இனங்களின் எண்ணிக்கை 56 சதவீதம் இருப்பது ஆய்வில் உறுதியானது. அவர்கள் மாவட்ட வனத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதை ஏற்று சாமனத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க தமிழக அரசுக்கு வனத்துறை பரிந்துரை அனுப்பி உள்ளது.
மதுரையில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்த ஸ்டார்ட் அப் டி.என் சார்பில் இரண்டு நாள் ‘ஸ்டார்ட் அப் திருவிழா’ மதுரை தமுக்கத்தில் செப் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மதுரை நடைபெறும் நிகழ்வில் ஸ்டார்ட் அப் வல்லுனர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், தொழில்துறை விவாதங்கள், முக்கிய உரைகள் நடப்பதால் வேலை நாடுவோர் பயன்பெற அறிவுறுத்தல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள, நக்கீரர் நுழைவாயிலை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் அதை நிறுத்த இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
தமிழகத்தில் இன்று மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.46 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழக அளவில் தொடர்ந்து 4 ஆவது நாளாக இன்றும் வெயில் தாக்கத்தில் மதுரை உச்சபட்சத்தை எட்டியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதுரை மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.