India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துராமலிங்கத் தேவரின் 117 ஆவது குருபூஜை விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையம், மதுரை மாநகர, மாவட்ட எல்லைக்குள் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.29,30) டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் த.வெ.கழகம் துவங்கி, மாநாட்டில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். குறிப்பாக அவரது வருகை தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு பலத்த அதிர்வை ஏற்படுத்தும். முதல்வர் கனவில் உள்ள உதயநிதிக்கு பெரும் சவாலாக அமையும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஶ்ரீகள்ளழகர் கோயிலில் “தைலக்காப்பு உற்சவம்” ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு உற்சவம் நவம்பர் 13 அன்று நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில், ஶ்ரீகள்ளழகர் எழுந்தருளி திருமஞ்சனம் காணும் நிகழ்வு தைலக்காப்பு உற்சவம் ஆகும். மூன்று நாட்கள் நடைபெறும், இந்த நிகழ்ச்சி வரும் நவம்பர் 11 – 13 வரை நடைபெற உள்ளது.
விளையாட்டு போட்டி குறித்து தாக்கலான பொதுநல மனுவை நேற்று விசாரித்த மதுரைக் கிளை நீதிபதி, விளையாட்டுப் போட்டிகளில் ஒரு பிரிவினரை சமூகப் புறக்கணிப்பு செய்வதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் தரப்பில் உரிய பங்களிப்பு தொகை பெற்று இரு தரப்பினரும் சேர்ந்து விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் போட்டி நடத்த போலீஸார் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டார்.
மதுரையில் நாளை (அக்.30) 117வது தேவர் ஜெயநதி விழாவை முன்னிட்டு அக்.29, அக்.30 தேதிகளில் மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்.29 மற்றும் அக்.30 தேதிகளில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணிவரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகின்றன.விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி அனுமதிக்கப்படுகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று ராணுவ வீரராக நடித்துள்ள அமரன் திரைப்படம் வெளியிட வெளியாக உள்ளது. இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நாளை காலை மதுரை பரவை அருகே உள்ள மங்கையர்கரசி மகளிர் கல்லூரிக்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனை காண அவரது ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
மதுரையில் மின்சாரம் பருவ மழை & இயற்கை பேரிடர் காலங்களில் மின்சாரம் தடைபட்டாலும் மின் கம்பி அறுந்து விழுந்தாலோ யாரைத் தொடர்பு கொள்ளலாம். அதன்படி மதுரை கிழக்கு கண்ணன் 9445852848, சிலைமான் விரகனூர் கதிர்வேல் 9445852979, கொட்டாம்பட்டி, கீழையூர்,ஆட்டுக்குளம், சந்திரன் 9445852854, அழகர் கோயில் மேலூர், அருண்குமார் 944585 2853, ஊமச்சிக்குளம், ஒத்தக்கடை கண்ணன் 9445852852- ஐ அழைக்கலாம். (பகிரவும் – SHARE)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 30-ல் நடைபெற உள்ளது. இதற்காக வருகின்ற 29ஆம் தேதி மதுரை வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுகவின் அமைச்சர் மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கட்சி இதற்கு அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.
மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி ரமேஷ் மகன் ஹரிஷ்பாபு 16. பிளஸ் 1 மாணவரான இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் விளாச்சேரி கண்மாயில் குளிக்க சென்றார். ஆழமான பகுதியில் சென்ற போது சகதியில் சிக்கிய ஹரிஷ்பாபு நீரில் மூழ்கினார். திருப்பரங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ஹரிஷ்பாபு உடலை மீட்டனர். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை வாடிப்பட்டி அருகே சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வரும் நிலையில் பள்ளியின் மாடியில் வைத்து இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாடியில் நூற்றுக்கணக்கான மது பாட்டில்களும் குவிந்து கிடப்பதால் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
Sorry, no posts matched your criteria.