Madurai

News November 1, 2024

மதுரையில் 1,000 டன் பட்டாசு கழிவு

image

மதுரை மாநகராட்சியில் தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளான இன்று ஒரே நாளில் 1,000 மெட்ரிக் டன் குப்பைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது. இந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் 3,500 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 வார்டுகளிலும் அகற்றப்படும் குப்பைகள் வெள்ளக்கல் குப்பை கிடங்கிற்கு லாரிகள் மூலமாக தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நாளையும் இப்பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2024

மதுரையில் 70 பேர் மீது வழக்குப் பதிவு

image

மதுரை மாவட்டத்தில், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்து உள்ளிட்ட காரணங்களால், 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மதுரை மாநகர காவல் துறை சார்பாக, 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளை மீறியது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News November 1, 2024

இறைச்சி கழிவுகள் கொட்டிய 5 கடைகளுக்கு அபராதம் 

image

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வைகையாற்றின் கரையோரம் இறைச்சி கழிவுகளை சாலைகளில் கொட்டியதற்காக முதற்கட்டமாக 5 கடைகளுக்கு தலா ரூ.10,000 விதம் ரூ.50,000 அபராதம் வசூல் செய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில்  இறைச்சி கழிவுகளை கொட்டினால் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 1, 2024

பேருந்து நிலையத்தில் கலைஞர் பெயர் அகற்றம்

image

மதுரை : அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே இருந்த “அம்பேத்கார் பேருந்து நிலையம்” என்ற பெயரை மாற்றி “கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு வளாகம் என்ற பெயர் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

News November 1, 2024

மதுரையில் 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு

image

மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடியில் புதிய டைடல் பார்க் அமைய உள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக அமைய உள்ள டைடல் பார்க் 12 தளங்களுடன் அமைகிறது. இதற்கான உட்கட்டமைப்பு பணிகள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து இ-டெண்டர் விடப்பட்டது. டைடல் பார்க் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளது.

News October 31, 2024

தீபாவளி நாளில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதி மாநகர் காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியிடப்படும். இன்று(அக்.31) கோவில் தெற்குவாசல்- சங்கர் கண்ணன்: 9498196797, திருப்பரங்குன்றம் தெற்குவாசல் அவனியாபுரம்- கோட்டைச்சாமி: 9498179248, திலகர் திடல் திடீர்நகர்- கிரேஸ் ஷோபியா பாய்: 9498195848, தல்லாகுளம் செல்லூர்- சில்வியா ஜாஸ்மின்: 8300036159, அண்ணாநகர்- பிளவர் ஷீலா: 8300011100.

News October 31, 2024

மதுரை: இன்றே இறுதி நாள் மக்களே!

image

மதுரை மாநகராட்சிக்கு 2024-25ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை(அக்.31) தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% (அதிகபட்சமாக ரூ.5,000/-) தள்ளுபடி வழங்கப்படும். எனவே பொதுமக்கள் வருகின்ற (அக்.31) ஆம் தேதிக்குள் சொத்துவரியினை செலுத்தி பயன்பெறுமாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2024

அம்பேத்கருக்கு பதில் கலைஞர் – விசிக எதிர்ப்பு

image

மதுரை: ஏற்கனவே ஆவணங்களில் “டாக்டர் அம்பேத்கர் பேருந்துநிலையம்” என்று மதுரை அலங்காநல்லூரில் இருந்ததை புதுப்பித்து “கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம்”என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போது வேலை நடைபெற்று வருகிறது. பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்று மதுரையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று(அக்.31) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News October 31, 2024

பட்டாசு வெடித்ததில் தகராறு- வெந்நீரை ஊற்றிய கொடூரம்!

image

மதுரை பெத்தானியபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நேற்று(அக்.30) மாலை வீட்டின் முன்பாக பட்டாசு வெடித்த போது எதிர் வீட்டைச் சேர்ந்த ஒச்சம்மாள் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் ஒச்சம்மாள் சசிக்குமாரின் மீது வெந்நீரை ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் ஒச்சம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 31, 2024

BREAKING:மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து

image

சென்னை – போடி ரயிலில் சக்கர பிரச்சனை – தண்டவாளத்தில் நிற்கும் ரயில்சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து செல்லக்கூடிய ரயிலில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் போடி செல்லக்கூடிய ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பழுதுநீக்கும் பணி நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுசொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் நீண்ட நேரமாக ரயில்களே காத்திருக்கிறார்கள்.

error: Content is protected !!