India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) மூலமாக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் பெற ஆண்டு வருமானம் கிராமப்புறத்திற்கு ரூ. 96,000, நகர்ப்புறத்திற்கு ரூ.1.20,000 என இருந்து வந்த நிலையில் தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டுவருமானம் ரூ. 3,00,000 என உயர்த்தி ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள தத்தனேரி கீழ்பாலம் மணவாளன் நகர் பகுதியில் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூறியும் கழிவு நீரை அகற்ற எந்த பணியையும் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தத்தனேரி சாலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டன. போலீசார் மக்களிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் தற்போது கிடைக்கும் மழைநீர் கண்மாய்களுக்கு வருவதால அடுத்தடுத்து கண்மாய்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஒடைகளில் ஊற்று துவங்கியது. கன்னிமார்புரம் பகுதியில் வெள்ளமலையில் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் தேசம் எதுவும் ஏற்படவில்லை.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முதல் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு முருகன் தெய்வானை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. வீதி உலாவையொட்டி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2ஆம் நாளான இன்று (03.11.2024) அன்னை மீனாட்சி கோலாட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மீனாட்சியம்மனை வழிபட்டனர்.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து இன்று மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் குவிந்தனர். முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பெரும்பாலான ரயில்களில் கூட்டம் நெரிசலுடன் பயணிகள் பயணித்து சென்றனர்.
தேர்தலையே சந்திக்காத த.வெ.க தலைவர் விஜய்யின் ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டன தீர்மானம் தவறானது என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த அனுபவத்தின் அடிப்படையில் விஜய் இதனை கூறுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசு பல கோடி செலவு செய்கின்றனர், இதனை குறைக்க வேண்டியது அவசியம் என்றார்.
மதுரை மேலூர் அருகேயுள்ள கம்பர்மலைபட்டியை சேர்ந்தவர் சேவுகரத்தினம் மகன் தனுஷ் (13). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். நேற்று விடுமுறை என்பதால் அருகில் உள்ள குளத்திற்கு சக நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து கீழவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர் நேற்று மாலை திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுக்குளம் சந்திப்பு பகுதியில் பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த ஓட்டுநர் பிரபாகரன் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.35 வரை, கத்தரிக்காய் ரூ.20 முதல் ரூ.30, வெண்டைக்காய் ரூ.10, பாகற்காய் ரூ.40, புடலங்காய் ரூ.30, உருட்டு மிளகாய் ரு.50,சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.50 – ரூ.65, கேரட் ரூ.40,பட்டர் பீன்ஸ் ரூ.120, பீட்ரூட் ரூ.40, முள்ளங்கி ரூ.30,உருளைக்கிழங்கு ரூ.50 – ரூ.60 க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.