India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியுடைய இப்பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து(நவ.5) மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குலசேகரபுரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த கமலஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மதுரை S.S.காலனி பகுதியில் உள்ள அனுஷனத்தின் அனுகிரகத்தின் சார்பில் சிறப்பு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை நேற்று(நவ.4) நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோருக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும், ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்ந்து வரதட்சணை கொடுமை புகார் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை சார்ந்த புகார்களுக்கு உடனடியாக 181 என்ற உதவி எண்ணிற்கோ அல்லது 8300021100 என்ற கைப்பேசி எண்ணிற்கோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கான தேர்வு முகாம் கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வரும் நவ.8ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. எனவே ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள தகுதியுடைய இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.குறிப்பாக அதில் நான்கு குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே குழந்தைகள் எதிர்காலம் கருதி பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என அரவிந்த் கண் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அலங்காநல்லூர் அருகே அழகாபுரியை சேர்ந்த பிரசாத்- சிவரஞ்சனி தம்பதியின் 2 வயது மகள் சுபாஷினி வீட்டின் அருகே தோட்டத்தில் கொண்டிருந்த போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. உடனே அருகில் குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, வருவாய் துறையினர் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேலு உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம், ஊமச்சிகுளம் உள்ளிட்ட காவல் சிரகங்களில் இன்று (04.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இரவு நேரங்களில் அழைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(நவ.4) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா கோருதல், மகளிர் உரிமை தொகை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 610 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. மனுக்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மதுரை நிகழ்ச்சியில் இன்று(நவ.11) செய்தியாளர்களிடம் பேசிய பிரேம லதா: சீமான் திடீரென்று அந்நியனாகவும், அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை. என் தம்பி என்று சொன்னார், ஏன் லாரியில் அடிபட்டு சாவேன் என்று சொன்னார் என அவரிடம் தான் கேட்க வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்றார்.
Sorry, no posts matched your criteria.