India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறுகையில், ”இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பு. நஷ்டத்தை தவிர்க்க பயிர் காப்பீடு செய்வது அவசியம். நெல், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகம், ஆதார் நகலுடன் அருகேயுள்ள பொதுச் சேவை மையங்கள், கூட்டுறவு வங்கி கிளைகளில் காப்பீடு செய்யலாம். இதற்கு நவம்பர் 15 கடைசி” என்றார்.
மதுரை கிழக்கு தொகுதி யா.நரசிங்கத்தில், இறந்த ஒருவரை அடக்கம் செய்ய மயானத்திற்கு நேற்று(நவ.10) கொண்டு சென்றனர். அப்போது மின்சார விளக்குகள் இல்லாத காரணத்தால் செல்போன் வெளிச்சம் மூலம் அடக்கம் செய்துள்ளனர். அப்போது பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் அடக்கம் செய்ய வருபவர்கள் செல்போன் மூலமாக டார்ச் லைட் அடித்து உடல்களை அடக்கம் செய்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே நிலையத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் நவ.14ல் மதுரை வழியாக திருநெல்வேலி செல்லும் நவ்யுக் விரைவு ரயில் (16788), நவ.17ல் காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் வாராந்திர ரயில் (16353) ஆகிய இரு ரயில்களும் திருச்சி செல்லாமல் கரூர், திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை சத்திரப்பட்டி அருகே உள்ள ஒயின்ஷாப் பகுதியில் ஒரு வாலிபர் ஒருவர் இன்று(நவ.10) கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாட்டிலை உடைத்து அவர் கழுத்தை அறுத்தது விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய சத்திரப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் அருகில் நின்ற டூவீலர் சிவகங்கை மாவட்ட பதிவெண் என்பதால் இறந்த நபர் சிவகங்கையை சேர்ந்தவரா என போலீசார் விசாரிக்கின்றனர்
மதுரை பச்சரிசிக்கார தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நிமிசந்த் ஜெயின். இவரது மகன் சஞ்சய் குமார் ஜெயினுக்கு(30) மதுப்பழக்கம் இருந்துள்ளது. இன்று(நவ.10) குடிபோதையில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். திடீர்நகர் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
பிரபல எழுத்தாளரும் சிறந்த சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்திரராஜன் இன்று(நவ.10)காலை வீட்டில் உள்ள கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்தவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மறைந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் உடலுக்கு டிவிஎஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டை அருகே கரடிபட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகள் அங்காள ஈஸ்வரி(13). வடபழஞ்சி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இம் மாணவி நேற்று(நவ.9) இரவு அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வயல் பகுதியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்று இவரை தீண்டியது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு, மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக இருப்பதால், நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் நேற்று(நவ.10) ஒரே நாளில் 41 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 23 பேர் குழந்தைகள். புறநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்கள் டெங்கு குறித்து அச்சமடைய தேவை இல்லை என மாவட்ட சுகாதார துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.