Madurai

News November 15, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், ஊமச்சிகுளம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (நவ.15)  இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

காதலிக்கும்போது முத்தம் கொடுப்பது குற்றமில்லை – ஐகோர்ட்

image

தூத்துக்குடியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 19 வயது இளம்பெண்ணை காதலித்தபோது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி வாலிபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்ட மதுரை ஐ கோர்ட், இந்த விவகாரம் இந்திய தண்டனை சட்டத்தில் குற்றமாக அமையாது என கருத்து தெரிவித்துள்ளது.

News November 15, 2024

மதுரை – கான்பூர் ரயில் தாமதமாக புறப்படும்

image

தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று (நவ.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை – கான்பூர் சென்ட்ரல் (01928) அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக நாளை (நவ.16) மதியம் 2 மணிக்கு அதாவது 14 மணி 25 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

நடிகை கஸ்தூரியை பிடிக்க டெல்லி விரைந்த மதுரை போலீஸ்

image

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மதுரை திருநகர் காவல் நிலையத்தில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரிய கஸ்தூரியின் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து நேற்று 2 தனிப்படைகள் அவரை பிடிக்க சென்னை சென்றன.தற்போது அவர் டெல்லியில் தஞ்சமடைந்துள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ஒரு தனிப்படை அங்கு விரைந்துள்ளது.

News November 15, 2024

மதுரையில் நடைபெறும் தனுஷின் ‘இட்லி கடை’ பட சூட்டிங் 

image

தமிழகத்தின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பூஜை துவங்கிய நிலையில், இதற்கான படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2024

மதுரை முல்லை நகர் விவகாரம் – சீமான் அறிக்கை

image

மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிக்கை அனுப்பியிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 15, 2024

கிரானைட் குவாரி -மதுரை ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு

image

மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரிகளின் பெரும் குட்டையில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, கனிம வள விதிப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா? – டிடிவி ஆவேசம்

image

மதுரை காட்டுநாயக்கர் சமுதாய மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி தங்கள் குழந்தைகளுடன் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. சாதி சான்று வழங்க மதுரை மாவட்ட நிர்வாகத்தையும் திமுக அரசையும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

News November 15, 2024

மதுரை மாநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*

News November 15, 2024

மதுரை மாநகரில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*

error: Content is protected !!