India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் பகுதியில் ஸ்பா உள்ளது. இங்கு, பாலியல் தொழில் நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், அங்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது, அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை மீட்ட போலீசார், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த ஒரு பெண், 2 ஆண்களை கைது செய்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7 ஆம் நாளான இன்று (16.11.2024) மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதியில் உலா வந்தனர். இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் நகரைச் சேர்ந்தவர் தனவல்லி. ஆட்டோ ஓட்டுனரான இவரது மகன் முத்துக்குமாருடன் (23) சேர்ந்து பனியன் கம்பெனி நடத்தி அதில் தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடன் தொல்லை அதிகரித்த நிலையில், பூர்வீக வீட்டை விற்க ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த முத்துக்குமார் நேற்று (நவ.15) இரவு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் திமுக அரசைக் கண்டித்து இன்று (நவ.16) முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆனால் இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்கவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது.
மதுரை அச்சம்பத்து பகுதியில் இரவு நேரங்களில் குரங்கு குல்லா மற்றும் டவுசர் அணிந்த கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 4 முதல் 5 பேர் கொண்ட கும்பலாக உலா வருவதாகவும், கடத்தாண்டு இது போன்ற கும்பல் மூலமாக இப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் இரவில் உலா வரத் துவங்கி உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது, இன்று(நவ.16) கார்த்திகை மாதம் தொடங்குவதை முன்னிட்டு மல்லிகைப்பூவின் விலை ரூ.1,500யாக உயர்ந்துள்ளது. முல்லை கிலோ ரூ.800, பிச்சி ரூ.800, சம்பங்கி ரூ.250, செண்டு மல்லி ரூ.200, செவ்வந்தி ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.200, மெட்ராஸ் மல்லி ரூ.900, அரளி ரூ.300 என விற்பனையானது. இந்த மாதம் முழுவதும் இதேபோல் விலை அதிகரிக்கும் என தகவல் தெரிவித்தனர்.
மதுரை- திண்டுக்கல் செல்லும் ரெயில்வே பாதையில் சோழவந்தான் பேட்டை ரெயில்வே கேட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.
மதுரை மாநகர் பகுதியான அரசரடி, அண்ணா நகர் ஆரப்பாளையம் துணைமின்நிலையங்களில் இன்று(நவ.16) மின்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அண்ணா நகர், கேகே நகர், அரசு மருத்துவமனை கோரிப்பாளையம், இ எஸ் ஐ மருத்துவமனை, கோச்சடை, செல்லூர், முனிச்சாலை, சம்மட்டிபுரம், ஆரப்பாளையம் மெயின் ரோடு, கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, பெத்தானியாபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. *பகிரவும்*
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் (நவ.16 &17) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1165 வாக்குச்சாவடி மையங்களில் 2752 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. *பகிரவும்*
Sorry, no posts matched your criteria.