India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.23 அன்று உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் கிராம மக்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நவ.27ல் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்.அவரின் 47ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மேலூரில் 10,000 பேருக்கு கோழி லெக்பீஸ், மட்டன் பிரியாணி விருந்து நவ.25ல் நடைபெற உள்ளது. அமைச்சர் மூர்த்தி இதனை தொடங்கி வைக்கிறார். இதற்காக பந்தல் கால் அமைக்கும் பணியினை தலைமை கழக செயற்குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், நகர் மன்ற தலைவருமான முகமது யாசின் இன்று துவக்கி வைத்தனர்.
மதுரை மாநகரில் மோட்டார் வாகன போக்குவரத்து துறையுடன் இணைந்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தகுதிச் சான்று மற்றும் உரிமம் இல்லாத 23 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிற விதிமீறலுக்காக 50 ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல்துறை சார்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி முதல் அழகர்மலை வரை பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கீழடி அகழாய்வுக்கு அனுமதி தராத ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி அளித்துள்ளது. எனவே தமிழக அரசு இத்திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை, மாட்டுத்தாவணி மேலூர் மெயின் சாலையில் இதய வடிவிலான ரெட் சிக்னல் வாகன ஒட்டிகளை கவர்ந்து வருகிறது. சென்னையில் இதய சிக்னல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. அதேபோல் மதுரையில் உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பு சர்வேயர் காலனி 120 அடி ரோடு மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சந்திப்பு சிக்னல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நேற்று(நவ.18) போக்குவரத்து துணை கமிஷனர் அனிதா உதவி கமிஷனர் இனமாறன் ஆய்வு செய்தனர்.
மதுரை மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று(நவ.18) கலெக்டர் சங்கீதா சிறுவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், பின்னர் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்
மதுரை மத்திய சிறை 1875ஆம் ஆண்டு, 31 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இட நெருக்கடியான இச்சிறையில் தற்போது 1800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை புறநகர் பகுதியில் புதிதாக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 89 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜோலார்பேட்டை, ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை வழியாக கொல்லத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து இந்த ரயில் நாளை(நவ.20) முதல் வரும் ஜன. மாதம் 15ந் தேதி வரை மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 21ம் முதல் ஜன.21வரை இயக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான, கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பணசாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், எழுகடல் தெருவில் உள்ள எழுகடல் விநாயகர் கோயில், சுடுதண்ணீர் வாய்க்கால் ராமானூஜம் நகரில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில், எழுகடல் தெரு காஞ்சன மாலையம்மன் கோயில் ஆகிய கோயில்களில் 21ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் உள்ள காவல் சரகங்களான உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், ஊமச்சிகுளம், மேலூர் பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.