Madurai

News December 5, 2024

விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை ஐகோர்ட் கிளை கேள்வி

image

மதுரை திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் சாலை வரை விபத்துகளை தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இப்பகுதிகளில் விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் மாநகராட்சி ஆணையர், எஸ் பி, நெடுஞ்சாலை துறை பொறியாளர் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

News December 5, 2024

மதுரை இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம் 

image

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடு. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டன.

News December 4, 2024

மதுரை அரசு ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

image

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மூர்த்தி என்பவர் மீது, அந்தப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். விடுதியில் பயின்று வரும் மாணவி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News December 3, 2024

மதுரையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

image

படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு டிச.07 மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா கொடிநாள் உண்டியல் வசூலினை துவக்கி வைக்கிறார்.அதனை தொடர்ந்து அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூடுதல் கட்டிட தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து அளித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கௌரவிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

மதுரையில் தினமும் 1,54,000 லிட்டர் பால் உற்பத்தி 

image

மதுரை மாவட்டத்தில் தற்போது 697 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் மூலமாக 15,798 பால் உற்பத்தியாளர்கள் நாளொன்றுக்கு தினசராசரியாக 1,54,000 லிட்டர் பால் உற்பத்தி செய்து மதுரை ஆவினுக்கு அனுப்பி வருகிறார்கள். இச்சங்கங்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

News December 3, 2024

பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ் 

image

மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு பால் விநியோகம் செய்யும் சுமார் 15,798 பால் உற்பத்தியாளர்களுக்கு வாரந்தோறும் வழங்கப்படும் பாலுக்கான தொகை மற்றும் அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையினை நேரடியாக அவருடைய வங்கி கணக்கில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பட்தியாளர்கள் விரைவாக வங்கி கணக்கை தொடங்க பால் உற்பத்தியாளர் சங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மதுரை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 3, 2024

சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் 

image

சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 9.15 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பயணிகள் அதற்கேற்றார் போல் தங்களை திட்டங்களை வகுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே புயல் காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2024

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்

image

மதுரை காளவாசல் பை பாஸ் ரோட்டில் அனுமதியின்றி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடமாடும் உணவு கூடங்கள், துரித உணவக கடைகள் அமைக்கப்பட்டன. இதனை நெடுஞ்சாலை துறையினர் மாநகராட்சி, காவல் துறையுடன் இணைந்து அனுமதி பெறாத கடைகளையும், வாகனங்களையும் இன்று அகற்றினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.

News December 3, 2024

தோட்டத்தில் மண்டை ஓடு எலும்புகள் கண்டுபிடிப்பு

image

அலங்காநல்லூர் அருகே கோவில் பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர் சீதாவிற்கு அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு பகுதியில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். மண்டை ஓடு மற்றும் எலும்புகளை கைப்பற்றிய அலங்காநல்லூர் போலீசார் அது குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

News December 3, 2024

மதுரை மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ்

image

மதுரை பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர உதவித் தொகை விவரங்கள், மதுரை மருத்துவ கல்லூரியால் தற்போது வரை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, மதுரை மருத்துவ கல்லூரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

error: Content is protected !!