Krishnagiri

News October 21, 2024

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (21/10/2024) இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 21, 2024

கிருஷ்ணகிரியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

image

காவல் துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலக மைதான வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூணிற்கு இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் “காவலர் வீர வணக்கம் நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

News October 21, 2024

திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

image

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 திருமண இணைகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன், மாவட்ட ஆட்சியர் சரயு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினர். உடன் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

News October 21, 2024

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமையன்று அணையில் விநாடிக்கு 1,079 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று(அக்20)  காலை விநாடிக்கு 1,206 கன அடியாக அதிகரித்தது.எனவே, அணையிலிருந்து தென்பெண்ணை ஆறு மற்றும் கால்வாயில் 1,206 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில் தற்போது அணை நீர்மட்டம் 41.98 அடியாக உள்ளது.

News October 21, 2024

செல்போன் டவரில் காப்பர்கம்பி திருடிய சிறுவன் கைது

image

பாகலூர் ஜீவாநகரில் செல்போன் டவரில் இருந்த காப்பர் கம்பிகளை சிறுவன் ஒருவன் திருடிக் கொண்டிருந்தான். அப்போது, அபாய ஒலி சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திற்கு ஒலித்துள்ளது. எனவே அவர்கள் பாகலூர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அலுவலர் முருகனுக்கும், பாகலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கர்நாடக மாநில சிறுவனை பிடித்து கைது செய்தனர்.

News October 21, 2024

இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20/10/2024 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 20, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இன்றைய மழை நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20/10/2024 பெய்த மழை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பேரூர் 19.8மி.மீ, தென்கனிக்கோட்டை 13.0 மி.மீ, ஓசூர் 24.6 மி.மீ, ஊத்தங்கரை 39.0 மி.மீ, பம்பர் டேம் 60.0 மி.மீ, பேணு காண்டபுரம், 8.4 மி.மீ, கெலவரபள்ளி டேம் 10.0 மி. மீ, ராயக்கோட்டை 7.0 மி.மீ, நெடுங்கல் 12.0 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 13.39 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News October 20, 2024

 வேலைவாய்ப்பு முகாமில் 423 பேருக்கு பணி நியமன ஆணை

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் 423 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

News October 19, 2024

 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 19, 2024

விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த வரதராஜ பெருமாள் (28) என்பவர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் காவல் நிலைய கோட்பட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூளை சாவு அடைந்தார். அதனை அடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு அலுவலர்கள், காவலர்கள் இறுதி அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர். 

error: Content is protected !!