India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திறந்தநிலை கல்வி இயக்ககம் சாா்பில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு பையூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் அக்.5ம் தேதி தொடங்க உள்ளது. இதில்10ம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்தக் கல்வி படித்திருந்தாலும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.25,000 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ 100 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கு வாய்ப்பிருக்கா?
கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்தும் சிவராமனுக்கு எவ்வாறு எலி மருந்து கிடைத்தது என்பது குறித்தும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் வாசுகி வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப வளர்ச்சி மையம் சார்பில் ஏற்றுமதி பயிற்சி நடத்தப்படுகிறது. வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் காலை10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர்கள் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை 91504 95272, 94442 45180 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூஜூவாடி பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் மகேந்திரன்(42), நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி, பள்ளி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றபோது ஏற்கனவே அறிமுகமான மகேந்திரன் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து கடைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் இவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
சென்னையில் நடைப்பெற்ற திமுகவின் பவள விழாவில் கட்சி விருதுக்காக தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள் கட்சி பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தலா ஒருவருக்கு நற்சான்று பணமுடிப்பு வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சாந்த மூர்த்திக்கு சிறந்த ஒன்றிய செயலாளர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாரட்டினார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா–வின் 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாராக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை கலந்து கொண்டார். அவர் பேசுகையில் திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்அமைச்சராக்க பாடுபடுவோம்’ என்றார். இதில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு பேசினார்.
கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாமில் 23 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தின் வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த போது,23 மாணவிகளில் 2 பேருக்கு 5லட்சமும், மீதமுள்ள 21 மாணவிகளுக்கு 1 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.