India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட புத்தக ஆர்வலர்கள் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து பராமரித்து வருவோர் தங்களது நூலகத்தில் உள்ள நூல்கள் எண்ணிக்கை, மற்றும் அரிய வகை நூல்கள் இருப்பின் அதன் விவரத்தினை 07.10.2024 க்குள் கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகம், தொலைபேசி எண்:04343-263643 தொடர்பு கொள்ளலாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக சென்று வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இன்று மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். மாதந்தோறும் தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்வார்கள். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சில்பா பிரபாகர் சதீஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பர்கூர், ஒசூர் ஆகிய இடங்களில் பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பர்கூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை (செப். 25), ஒசூரில் எம்ஜிஆர் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (செப். 26) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரையில் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 04343-291983 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி எஸ் பி ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வரும் நிலையில் கொள்ளையர்கள் சம்பவ இடத்திற்கு காரில் வந்து 12 நிமிடங்களில் கேஸ் வெல்டிங் வைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், 23 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போய் இருப்பதாகவும் மகாராஜகடை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் பேக்கரி கடை உரிமையாளர் வெங்கடேசன் என்பவரை புளியாண்டபட்டியை சேர்ந்த ராஜா (50) என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வண்டிக்கு பெட்ரோல் போட பணம் கொடு என்று தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராஜாவை கைது செய்த ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 335 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் குருபரப்பள்ளி, ஓசூர், மத்திகிரி, சிப்காட், பேரிகை, ராயக்கோட்டை, சானசந்திரம் பகுதிகளில் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் குட்கா கஞ்சா விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த உடுங்கல் போடூர் கிராமத்தில் மாதேஷ் என்பவரின் தம்பி வெங்கடேஷ் அவரது மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற காரணத்தினால் கொலை செய்ததாக கூறி சரன் அடைந்தார். மேலும், தான் வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தியும் மேலும், தம்பி வைத்திருந்த அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குனர்இரா கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2024-25 ம் ஆண்டில் காரிப் பருவத்தில் பருத்தி மற்றும் நெல் பயிர்களில் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்கள், பூச்சி, நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு ஆகியவற்றுக்காக காப்பீடு தொகையை உரிய காலத்தில் செலுத்தி பயன்டைய தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.