India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக அமைக்கப்பட்ட சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன், மகளிர் திட்ட இணை இயக்குநர் பெரியசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனைமேம்பாட்டு இயக்கத் திட்டம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 2,500 வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 25 ஆயிரம் பனை விதைகள் ரூ.75 ஆயிரம் மதிப்பில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று பெத்தமேலுப்பள்ளி கிராமம், முனியப்பன் குட்டை கரையோரத்தில் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டார வள மையத்தில் இலவச ஆதார் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலாண்டு கோடை விடுமுறை நாட்களில் மட்டும் நடைபெற உள்ளது. மாணவ மாணவிகள் 30.09.2024 முதல் 04.10.2024 வரை காலை 9.30 மணி முதல் 5 மணி வரை நவநீதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கட்சியினர்க்கு அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நாளை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழாவில் நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பங்கேற்பாளர்கள் நாளை 12 மணிக்குள் கிருஷ்ணகிரி தலைமை அலுவலகம் வர வேண்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் ஆற்றில் இருப்பு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்தார். 2022-ம் ஆண்டு 1.60 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.
தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரது நிலத்திற்கான சிட்டாவில் பெயரை மாற்ற விஏஓ மாதேஸ்வரன் என்பவர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ராஜேந்திரனின் உறவினர் வெங்கடேசன் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய 4 ஆயிரம் ரூபாயை விஏஓவிடம் கொடுக்கும்போது போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ வாகனம் பயன்பாட்டில் இருக்கிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, கால்நடைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதியும் பெறலாம். இலவச அழைப்பு எண் 1962. கிருஷ்ணகிரி கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
கெலமங்கலம் பேரூராட்சியில் இன்று சாதாரண கூட்டம் தலைவர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து வெளிநடப்பு செய்தனர்.
காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன்வளத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில், 2 லட்சம் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணிகளை மாவட்டம் ஆட்சியர் சரயு துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முப்படைகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் பல்வேறு விதமான தொழில் பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், பிரிட்ஜ் பராமரிப்பு, எலக்ட்ரீசியன்,
பிளம்பிங் உள்ளிட்ட 21 வகையான பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.