India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையில், வனத்துறை சார்பாக, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஒரு கோடி பனை விதை நடுதல் 2024-2025 திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2000 பனை விதைகள் நடவுசெய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று 25.11.2024 துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த 593 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதிமுக கட்சி கொடி ஏற்று விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு வளமான கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்றார். இதில், மதிமுக நிர்வாகிகள் பாலமுரளி, தலைமை செயற்குழு உறுப்பினர் நவமணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற SSR 2025 சிறப்பு முகாமில் பல்வேறு வகையான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, 16.11.2024 முதல் 24.11.2024 வரை SSR 2025 சிறப்பு முகாமில் மொத்தம் 28,307 பெறப்பட்டுள்ளன. பெறப்பட்டுள்ளன. இதில், ஊத்த்கரைரை, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் என மாவட்டம் முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சிறுதானிய இயக்கத்தின் கீழ், விவசாயிகள் தங்கள் தரிசு நிலங்களை உழுவதற்கு 40% வரை மானியம் பெறலாம். விவசாயிகள் தங்கள் ஆதார், நிலச்சான்று, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையில் விண்ணப்பித்து இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெறலாம். வரும் 2028 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் வயல்வெளிகளில் உள்ள ‘பம்ப் செட்’டுகளை இயக்க செல்லும் போது பாம்பு திண்டல் மற்றும் விஷப் பூச்சிக்கடிக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் ஒசூரை சுற்றி 5 இடங்களில் முன்மொழியப்பட்ட விமான நிலையத்துக்கான இடங்களை பரிசீலனை செய்தது.அதில் தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனம் அருகில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கோபிநாத் எம்பி தெரிவித்தார்.
உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.
ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்த புகார்களில் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
Sorry, no posts matched your criteria.