Krishnagiri

News October 5, 2024

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆய்வுக்கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக 6-18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளுதல் குறித்து பிறத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் கே.எம். சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News October 4, 2024

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 19 தேதி கடைசி நாள்

image

தீபாவளியை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் https://tnesevai.tn.gov. என்ற இணையதளம் வாயிலாக அக்டோபர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை

image

ஒரு பெற்றோர் மட்டும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.4,000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க பெற்றோர் இறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று, ரேஷன் கார்டு, வருமானவரி உள்ளிட்ட சான்றுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 4, 2024

வாக்காளர் அட்டையில் இருமுறை பதிவுகளை நீக்க நடவடிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள இருமுறை பதிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரே வாக்கு சாவடியில் ஒரே பாகத்தில் 1,337 வாக்காளர்களும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதியில் 1,055 வாக்காளர்களும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் சேர்த்து 1,15,566 வாக்காளர்கள் ஒரே பெயர், வயது, உறவு என ஒத்த நபர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு; அரசு தரப்பில் குற்றப்பத்திரிக்கை

image

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் அக் 15 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், சிவராமன் மரணம் குறித்து சேலம் குற்றவியல் நீதிமன்ற அறிக்கைக்கு பின் விசாரணை நடத்தப்பட உள்ளது எனவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 3, 2024

கிருஷ்ணகிரி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

சிவகாசி பகுதியை சேர்ந்த மகாராஜ் மகன் ராகுல் (22), இவருடைய நண்பர் வெற்றிவேல் (27) இருவரும் உடல் நலமின்றி கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களது நண்பரை பார்ப்பதற்காக நேற்று டூவீலரில் கிருஷ்ணகிரி நோக்கி வந்த போது சூளகிரி அருகே வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் ராகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வெற்றிவேல் சிகிச்சை பெற்று வருகிறார். சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை.

News October 3, 2024

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒரு நாதக பிரமுகர் கைது

image

பர்கூர் அருகே தனியார் பள்ளியில், போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி பயிற்சியாளரும், முன்னாள் நாதக நிர்வாகியுமான சிவராமன் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சிவராமன், எலி மருந்து தின்ற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் நாதக பிரமுகர் ரவி(30) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

News October 2, 2024

கிருஷ்ணகிரி சார் பதிவாளர்கள் இடமாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட சார்பதிவாளர்கள் இடமாற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு அவல்பூந்துறையில் பணியாற்றிய பெருமாள் ராஜா கிருஷ்ணகிரி கெலமங்கலம் சார்பதிவாளராகவும், ராயக்கோட்டையில் பணியாற்றிய ராகோத்தமன் தற்காலிக இணை பதிவாளராக கோவை சிங்காநல்லூருக்கும், சார்பதிவாளர் மாவட்ட அலுவலகம் ஜெயக்குமார் வேலூர், கணியம்பாடிக்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் அறிவித்துள்ளார்.

News October 2, 2024

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் மாபெரும் இரத்ததான முகாம்

image

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் 30வது மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. வரும் சனிக்கிழமை (05.10.2024) காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் இந்தியன் ரெட் சொசைட்டி தலைமை ஏற்று நடத்த உள்ளனர். இரத்ததான தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 1, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட நாதக நிர்வாகிகள் போர்க்கொடி

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில், கட்சியில் யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார் என மண்டல நா.த.க. ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாகவும் கரு.பிரபாகரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!