Krishnagiri

News November 28, 2024

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் அதானி குழுமம் செய்ததாகக் கூறப்படும் ஊழல் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதானியை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்த ஊழல் தமிழக மின்சார வாரியத்தையும் பாதித்துள்ளதாக குற்றம் சாட்டினர். கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

News November 28, 2024

கிருஷ்ணகிரியில் மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 30ஆம் தேதி காலை காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, வரும் 30ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் எச்சரித்துள்ளார்.

News November 28, 2024

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிவிப்பு 

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA விடுத்துள்ள அறிக்கையில், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசனை நடத்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் தலைமையில் நாளை (29/11/2024) ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குந்தாரப்பள்ளி கூட்டுரோடு ஸ்ரீ குமரன் மஹாலில் நடைபெற உள்ளது.

News November 28, 2024

ஓசூர் தனியார் மருத்துவமனை சாதனை

image

ஓசூர் தம்பதிக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குறை மாதத்தில் ஒரு கிலோ எடையுடன் பெண்குழந்தை பிறந்தது.சில நாட்களில் குழந்தையின் சிறு குடலில் துளை ஏற்பட்டதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டது.ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.100 நாட்களை கடந்த பிறகு 2.5 கிலோ ஆன் பிறகு குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குழந்தை உடல்நலத்துடன் உள்ளது.

News November 28, 2024

அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

image

ஒசூர் அரசு மருத்துவமனையில் இன்று நவம்பர் 27ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.ஏ பிரகாஷ் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இதில் மேயர் சத்யா, மாமன்ற உறுப்பினர் என்.எஸ் மாதேஸ்வரன், அவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட திமுக இளைஞர் கலந்து கொண்டனர்.

News November 27, 2024

துணை முதல்வர் பிறந்தநாளில் 4800 பேருக்கு பிரியாணி விருந்து

image

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே, இன்று, கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பர்கூர் எம்.எல்.ஏ தே.மதியழகன் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், 4800 பேர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திமுக பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் செய்திருந்தார். 

News November 27, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு ஔவையார் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் டிச 31ஆம் தேதிக்குள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருது பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

News November 27, 2024

மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை

image

ஓசூர் அருகே உள்ள குருபசப்படி கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு விவசாயி மீசை எல்லப்பா (67) என்பவர், அவரது மூத்த மகன் சுப்பிரமணியனை மாடுகளை கேட்டதற்காக கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இவ்வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சந்தோஷ், மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

News November 27, 2024

ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.எ.ஒ மற்றும் உதவியாளர் கைது

image

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் வாரிசு சான்றிதழ் கோரி இணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.முருகேசனிடம் வி.ஏ.ஒ.தம்பிதுரை, உதவியாளர் புஷ்பா ஆகிய 2 பேரும் ரூ.4 ஆயிரம் கேட்டதாகத் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் முருகேசன், மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் ரூ.4ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.எ.ஒ மற்றும் உதவியாளரை கைது செய்தனர். 

News November 26, 2024

கிருஷ்ணகிரியில் 25 ஆயிரம் பனை விதை நடவு செய்யும் பணி

image

கிருஷ்ணகிரி, திப்பனப்பள்ளி ஏரிக்கரை ஓரத்தில் வனத்துறை சார்பாக பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!