Krishnagiri

News October 24, 2024

கிருஷ்ணகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

கிருஷ்ணகிரியில்- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை, ராயக்கோட்டையில் இருந்து ஒசூர் செல்லும் சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. தண்ணீர், உணவு இல்லாமல் செரிசலில் சிக்கியதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

News October 24, 2024

கிருஷ்ணகிரியில் 6 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆட்சியர் தகவல்

image

.கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 1866 பணியிடங்களுக்கான தேர்வு வரும் 26ம் தேதி சனிக்கிழமையன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கு தேர்வுக்கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதுடன், தேர்வர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு கூடத்திற்கு வரவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 24, 2024

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள கே ஆர் பி அணையில் நீர்வரத்து 3438 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து 3313 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளராக பணிபுரிய அனுமதிக்கப்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது.35 வயதுக்குட்பட்ட அடிப்படை கணினி திறன்கள், தகவல் தொடர்பு திறன்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் நவ.1ம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை அளவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை பிற்பகல் வரை ஒசூர், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு இடங்களில் மழை பொழிவு காணப்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி மழையளவு விவரம் (மி.மீ) போச்சம்பள்ளி 42 மி.மீ, தளி 40 மி.மீ, பாரூர் 21.8 மி.மீ, கெலவரப்பள்ளி அணை 12 மி.மீ, பெணுகொண்டாபுரம் 11.2 மி.மீ, நெடுங்கல், ஒசூரில் தலா 2 மி.மீ., கிருஷ்ணகிரி 1 மி.மீ. மழை பதிவானது.

News October 24, 2024

கிருஷ்ணகிரி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக https://gmekrishnagiri.org/ என்ற இணையதளம் மூலம் முகவரி பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற வேண்டாம் எனவும் மேலும், கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News October 23, 2024

போலி என்சிசி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

image

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் வழக்கில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை

image

ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த இராமாயி (40), சிவக்குமார் (30) ஆகிய இருவரும் ஊத்தங்கரை நேருநகரில் திருமணம் செய்துகொள்ளாமல் 8 வருட காலம் குடும்பம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இராமாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவகுமார் 18.05.2018-ம் தேதி இராமாயி என்பவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட் சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

News October 23, 2024

கிருஷ்ணகிரி  சீர்மரபினருக்கு ஆட்சியர் அறிவிப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி மருத்துவம், ஓய்வூதியம், திருமணம் ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் 24.10.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 11-ல் நடத்தப்பட உள்ளது. எனவே தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு அறிவித்துள்ளார். 

News October 23, 2024

30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

image

கிருஷ்ணகிரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நடந்தது. இதில் சிறந்த அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்கள், மா உற்பத்தியாளர்கள் உள்பட 79 பேருக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினார். இந்த கண்காட்சியில் சிறந்த அரங்கிற்கான முதல் பரிசு தோட்டக்கலைத்துறைக்கும், 2-ம் பரிசு கிருஷ்ணகிரி நகராட்சிக்கும், 3-ம் பரிசு காவல் துறைக்கும் வழங்கப்பட்டது.

error: Content is protected !!