Krishnagiri

News October 29, 2024

தேன்கனிக்கோட்டையில் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரக்கட்டா வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் பல்வேறு குழுக்களாக காட்டு யானைகள் சுற்றி திரிந்து ராகி, நெல் உள்ளிட்ட விவசாய விளை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்துடன் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அந்த காட்டு யானைகளை அடர்ந்த ஜவளகிரி வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News October 29, 2024

ஆவினில் 3 கோடி ரூபாய்க்கு தீபாவளி விற்பனை இலக்கு

image

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு உட்பட்ட 226 பால் விற்பனை நிலையங்களில் சிறப்பு மைசூர் பாகு, நெய் அல்வா, பால்கேக், பால்கோவா, நெய் மிக்சர் என 22 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகள், 10 டன் நெய் என மொத்தம் ரூ. 3 கோடிக்கு தீபாவளிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆவின் இனிப்பு பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News October 29, 2024

ஒசூரில் 7 பட்டாசு குடோன்களுக்கு ‘சீல்’

image

ஒசூா் அருகே பேகேப்பள்ளி பகுதியில் சந்திரசேகா் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் 8 பட்டாசு கடைகள் போடப்பட்டுள்ளன. இதில் ஒரு கடைக்கு மட்டும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தது வருவாய்த் துறையினா் சோதனை செய்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கடையில் அடுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. போலீசார் குடோன்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.

News October 28, 2024

இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 28, 2024

கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே.எம். சரயு இ. ஆ. ப., இன்று 28.10.2024 பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள் உள்ளார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

News October 28, 2024

மாணவியை தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது

image

ஓசூர் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக மாணவியை உடற்பயிற்சி ஆசிரியர் நடுரோட்டில் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பாகலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், மாணவியை தாக்கிய பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். 

News October 28, 2024

கிருஷ்ணகிரியில் சூடு பிடித்த தீபாவளி வியாபாரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 31.10.2024 வியாழக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகைகள், ஆடைகள், இனிப்பு கார வகைகள் மற்றும் பட்டாசுகள் என்று அனைத்து விதமான வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நேற்று விடுமுறை என்பதால் புத்தாடைகள் வாங்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

News October 28, 2024

கிருஷ்ணகிரியில் தீபாவளி கொண்டாட கட்டுப்பாடு

image

கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறித்தியுள்ளார்.

News October 28, 2024

வேப்பனப்பள்ளி அருகே சுற்றித்திரியும் யானை

image

வேப்பனப்பள்ளிக்கு அடுத்த மகராஜகடை வனப்பகுதியில் இருந்து 3 நாட்களாக ஒரு யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை தமிழக எல்லையில் உள்ள கொங்கனப்பள்ளி, எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே, இரவு நேரங்களில் நடமாடும் யானைகளால்  விவசாயிகள், பொதுமக்கள் விவசாய நிலத்தில் தங்க வேண்டாம். வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News October 28, 2024

கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்தவர் கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுசோனை – பேவநத்தம் செல்லும் சாலையில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த கெலமங்கலம் நேதாஜி நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை ஆய்வாளர் பெரிய தம்பி, உதவி ஆய்வாளர் சிற்றரசு தலைமையிலான போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கர்நாடகா மது பாக்கெட்டுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!