India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் அன்றைய நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
ஓசூரில் உள்ள தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கம் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் தொழிலாளர்களுக்கு 2025 ஆண்டுக்கான காலண்டர் மற்றும் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அணியும், சென்னை அணியும் மூன்றாமிடத்திற்கு மோதின. இதில், 25-19, 25-16 என்ற நேர் செட்கணக்கில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மூன்றாமிடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசப்பா மனைவி நாகம்மா 59 என்பவர் விளைநிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை நாகமாவை பயங்கரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக தைத்திருநாளான பொங்கல் – 2025 திருநாளையொட்டி, சமத்துவம் மற்றும் சுகாதார பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று துவக்கி வைத்து, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைகுறள், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
ஓசூரில் டாடா நிறுவனம் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். விரிவாக்கம் செய்தபின் ஐபோன் பாகங்களை அசெம்பிள் செய்யும் பணி தொடங்கும் எனவும் இதற்கான அறிவிப்பு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் தளி அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கும்ளாபுரம் குளத்தின் அருகே ஆண் ஒருவரின் தலை எரிந்த நிலையில் கிடந்தது. தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கும்ளாபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஷான்பாஷா (55) என்பது தெரிந்தது. இதையடுத்து தலையை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை தேடி வருகின்றனர்.
ஓசூர் அருகே கொளதாசபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்.18ல் கர்நாடக மாநிலம் சூளகுண்டாவைச் சேர்ந்த ரேவந்த்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள கொலையாளிகள் 5 பேர் நேற்று ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது அவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் 5 பேர் வந்ததால் அவர்கள் 10 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை ஆட்சியர் கே.எம்.சரயு, நேற்று (ஜன.09) துவக்கி வைத்து, உயர்கல்வி குறித்த வழிகாட்டி கையெட்டை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கூட்டுறவு நியாயவிலை கடையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு கலந்துகொண்டு பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.