Krishnagiri

News April 8, 2025

மது பாட்டில்களை திருடி ஆன்லைனில் விற்றவர்கள் கைது

image

தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி சென்று ஆன்லைனில் விற்பனை செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தேன்கனிக்கோட்டை போலீசார், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாப்ரானப்பள் சேர்ந்த சபரி (25), தீனா(24), ஹரிஸ்(33), நாகராஜ்(24) ஆகியோரை கைது செய்தனர்.

News April 8, 2025

 மதுபான பாட்டில்களை கடத்திய 5 பேர் கைது

image

தேன்கனிக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு காரில் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை பெட்டி பெட்டியாக கடத்தி சென்றதை பிடித்தனர். கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஸ் (33), தீனா (24) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த திருசபரி (25), தேன்கனிக்கோட்டை சாப்ரானப்பள்ளியை சந்தோஸ் (20), கர்நாடகா நாகராஜ் (24) ஆகிய 5 பேரை கைது செய்து மதுபானங்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.

News April 7, 2025

யாரும் அறியாத கிருஷ்ணகிரி கல்திட்டைகள்

image

முதுமக்கள் தாழி பற்றி தெரிந்தவர்கள் டால்மென் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.கிருஷ்ணகிரியில் மல்லச்சத்திரம் பகுயில் முதுமக்களை அடக்கம் செய்த டால்மென்ஸ் எனப்படும் கற்திட்டைகள் காணப்படுகின்றன.சுற்றிலும் பாறைகளை கொண்டு சிறிய அறை போல் அமைத்து அதில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இது போன்று இப்பகுதியில் நிறைய கல் திட்டைகள் உள்ளது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இங்கே கிளிக் <<>>செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இங்கே கிளிக் <<>>செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

News April 7, 2025

அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 10ஆம் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்…

News April 6, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 06/04/2025 ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 6, 2025

கிருஷ்ணகிரியின் டாப் 5 டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்

image

கிருஷ்ணகிரி மக்கள் இந்த சம்மர் லீவுக்கு வெளியில் எங்கும் அலையாமல் கீழ்கண்ட உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க
1.கே.ஆர்.பி டேம்
2.தளி ஏரி
3.கிருஷ்ணகிரி கோட்டை
4.காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில்
5.அய்யூர் இயற்கை பூங்கா
இப்பவே நட்பு வட்டாரத்துல ஷேர் செய்து ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க…

News April 6, 2025

கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி மறைவு 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கல்வி நிறுவனம் பாரத் கல்வி அறக்கட்டளை தலைவரும் கிருஷ்ணகிரி  முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான C.பெருமாள்  இன்று காலை 5.00 மணி அளவில் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!