India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற 10ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படித்த இளைஞர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை மே 31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 09/04/2025 ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி, கல்லுக்குறிக்கியில் புகழ் பெற்ற கால பைரவர் கோயில் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் இங்கு கால பைரவர் இரண்டு சிலைகளாக உள்ளார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
கே.ஆர்.பி அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் 30 நாட்கள் மொபைல்போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்க உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 15க்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், மேலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூர் கோயிர் ஃபோம்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 22-35 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளமா கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 30 காலி பணியிடங்கள் உள்ளன. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
தளி அருகே கும்மாளாபுரம் வனப்பகுதியில் முகாமிட்ட 10-க்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் வருகின்றன. ஆறுப்பள்ளி கிராமத்தில் மூன்று யானைகள் புகுந்து, விவசாயிகள் சதீஷ்ரெட்டி, நாராயணரெட்டி, முனிராஜ்ரெட்டி ஆகியோரின் தோட்டங்களில் வாழை, வெள்ளரிக்காய், சுரக்காய் பயிர்களை சேதப்படுத்தின. இதற்கு விவசாயிகள் இழப்பீடு கோரினர்.
தளி ஏரி மற்றும் பூங்கா ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முழுவதும் மலை கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 1000 அடி உயரத்தில் அமையபெற்ற கிராமம் ஆகும். இவ்விடத்தின் தட்ப வெட்ப நிலை ஆண்டு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதால் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியினை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்தனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ளது பெட்டமுகிளாலம் கிராமம். கடல்மட்டத்தில் இருந்து 2800மீ உயரத்தில் பசுமையான இயற்கை சூழல் நிறைந்த இந்த பகுதி கிருஷ்ணகிரியின் ஊட்டியாக உள்ளது. இங்கிருந்து சிறிது தொலைவில் பஞ்சப்பள்ளி அணை, சாமி ஏரி ஐய்யூர்வன சுற்றுச்சூழல் மையம் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் கேசரக்குலிஅணை சென்றசாமி கோவில் போன்றவை உள்ளது.இந்த லீவுக்கு போலாமானு உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி கேளுங்க
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காச நோய் இல்லாத ஊராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார் ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டி ஊராட்சி காச நோய் இல்லாத ஊராட்சி நிலை அடைந்ததற்காக பாராட்டி, பாராட்டு சான்றிதழை ஊராட்சி செயலர் கிருபாகரனுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள்<
Sorry, no posts matched your criteria.