India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு சையத்பாஷா தர்காவில் நாளை துவங்க இருந்த உருஸ் திருவிழா, நாடாளுமன்ற தேர்தலால் வரும் 21ஆம் தேதி துவங்க உள்ளது. அதன்படி 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு அனைத்து ஜமாத் கமிட்டியினர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் சந்தனகுடம் மலர் அலங்காரத்துடன் ஊர்வலம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் மற்றும் போலீசார் சிங்கிரிப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்களைச் சுற்றி வளைத்து விசாரித்தனர். அவர்கள் பெருமாள் (40), நாகராஜ் (35), சண்முகம் எனத் தெரிந்தது. அவர்களை கைதுசெய்து பணம் மற்றும் 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரூ கோரமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் இன்று (ஏப்ரல் 17) சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்லாவி பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பேரணி சென்று கடை வியாபாரிகளிடம் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்துக்கு ‘கை’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோகனப்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி கங்கம்மா (43). இவர்கள் கடந்த 7ஆம் தேதி அகரம் அருகே டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கங்கம்மா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிசிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சியை போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நேற்று (ஏப்.16) செய்து காட்டினர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சிகள் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் இன்று (ஏப்-16) செய்து காட்டினார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஓசூர், கேசிசி நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக அப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு தண்ணீர் வழங்காத காரணத்தால், பல்வேறு தரப்பு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், பேரூராட்சி நிர்வாகத்திலும் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அப்பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என தங்களது வீடுகளில் பதாகைகளை வைத்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை பாதுகாப்பு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிரண் குமாரி பாசி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி எம்பி தொகுதி பாஜக வேட்பாளர் சி.நரசிம்மனை ஆதரித்து போச்சம்பள்ளி அருகே காட்டாகரம், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமரைச் சின்னத்திற்கு பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜெ.எம்.ரமேஷ் தலைமையில் பாஜகவினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் நேற்று ஏராளமான பெண்கள் தாமரைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.