India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரியில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால்<

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. உழவுக்குத் துணையாக நிற்கும் கால்நடைகளைப் போற்றும் இவ்விழாவில், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாதுகாப்புடன் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தையும், பண்பாட்டையும் பேணும் வகையில் இந்த வாழ்த்துச் செய்தி மாவட்ட காவல் துறையினரால் பகிரப்பட்டுள்ளது.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4)குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

வாடகை வீட்டுக்கு செல்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகை உயர்த்தபட வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக செலுத்த வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள், சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242 4) IOB – 96777 11234, 5) HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

நாகரசம்பட்டி அருகே உள்ள வீரமலையை சேர்ந்த தம்பதி ஜெயராஜ் – மீனா (28). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையினால் மனமுடைந்த மீனா கடந்த 25-ந் தேதி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இரவு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி மற்றும் புகார்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 04343-236010-ஐ அழைக்கலாம். குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.